பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 1 ஒன்பாைெடு பத்து நூறு மொன்றின் முன்னதி னேனைய முரணி யொவ்வொடு தகர கிறீஇப் பஃதகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே'. என்னும் நன்னூல் நூற்பாவாலும் அறியலாம். தலைமைத் தமிழிலக்கணப் பேராசிரியர்கள் இரு வரும் எழுதியிருக்கிருர்கள் என்பதற்காக, இவர்தம் கருத்தை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவியலுமா ? இந்தக் கருத்தைத் தேவநேயப் பாவாணரும் ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுதியுள்ள குறிப்புரையில் பின்வருமாறு மறுத் துள்ளார் : இந்நூற்பா ஒன்பது பஃது=தொண்ணுாறு என முடிக்கிறது. இம்முடிபு எவ்வகையிலும் பொருங்தாத தொன்ரும். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம் பெயர் தொண்டு என்பது. 'தொண்டு தலையிட்ட” (தொல். 1858) என்று ஆசிரியரும், ‘தொண்டுபடு திவவு (மலைபடு. 21) என்று பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனரும் கூறுதல் காண்க. தொண்டு என்னும் சொல் தொல் காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப் போய்விட் டது. அவர் காலத்திற்குமுன் தொண்டு தொண்பது தொண்ணுாறு தொள்ளாயிரம் என்பன முறையே 9, 90, 900, 9000 என்னும் எண்களைக் குறிக்கும் 1. நன்னூல்-எழுத்ததிகாரம்-உயிரீற்றுப் புணரியல்-44, 2 தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்-நச்சிர்ைக்கினியம் - கழகப் பதிப்பு பாவாணரின் அடிக் குறிப்பு-குற்றியலுகரப் புணரியல்-40.