பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 சொற்கட்கும் தீர்வு காண முடியும். முதலில் ஒன்பது என்பதை எடுத்துக்கொள்வாம் : பொதுவாகக் கணக்கியலே எடுத்துக்கொள்ளின் ஒன்று முதல் பத்துவரையுமே அடிப்படை எண்கள்-அவற்ருலாய பெருக்கமே ம ற் ைற ய எண்கள்-என்பதை அனைவரும் அறிவர். தமிழில் ஒன்று முதல் பத்து வரையுமுள்ள எண்ணுப் பெயர் களுள் ஒன்பது என்னும் எண்ணுப் பெயர் தவிர மற்றைய யாவும் ஒரே சொல்லா யுள்ளன. ஒன்பது என்னும் பெயர் ஒன்(று) + ப(த்)து = ஒன்பது என இரு சொற்கள் புணர்ந்து உண்டானதற்குரிய அறிகுறி தென்படுகிறது. ஒன்று-பத்து என்பன சேர்ந்து ஒன்பது என்னும் பெயர் உண்டாயிற் ஹென்ருல், இரண்டு-பத்து=இருபது (10X2=20), மூன்று-பத்து = முப்பது (10X8 = 80), எட்டு+ பத்து = எண்பது (10x8=80) என்பனபோல, ஒன்று-பத்து என்னும் சொற்கள் புணர்ந்து (10X1=10) ஒரு பத்தைத்தானே அதாவது பத்து என்னும் எண்ணத்தானே குறிக்க வேண்டும் ? மாருக ஒன்பது (9) என்னும் எண்ணே எவ்வாறு குறிக்க முடியும் ? என்ற வின எழும். இரண்டு பத்துக்களைக் குறிக்க 'இருபது' என்னும் பெயரும் ஆறு பத்துக்களைக் குறிக்க அறுபது' என்னும் பெயரும் இருப்பதுபோல ஒரு பத்தைக் குறிக்க நூல் வழக்கிலும் பேச்சு வழக்கிலும் ஒருபது' என்னும் பெயர் வழக்காறு தனியே இருப்பதால், ஒன்பது என்னும் பெயர் ஒரு பத்தைக் (10) குறிக் காமல் 9 என்னும் எண்ணையே குறிக்கும். அங்ங்ன மெனில், ஒன்று + பத்து = ஒன்பது என்னும்