பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

30


வர்களுக்கும் தொந்தி வந்திருக்கிறது என்று கூறினால், அவர்களை நாம் நிச்சயம் இனங்கண்டுகொள்ளலாம்.

அந்த உழைப்பாளிகள், பயங்கரக் குடிகாரர்களாக இருப்பார்கள்.

மதுபானம் அருந்துவதற்கும், வயிறு பெருத்து விடுவதற்கும் என்ன சம்பந்தம் என்பதையும் இங்கு ஆராய்வோம். மதுபானத்தில் உள்ள ஆல்கஹாலுக்கு போதை தர மட்டும் தெரிந்திருந்தால் பரவாயில்லை. வயிற்றுக்குள்ளே சென்று பல வேலைகளைச் செய்யவும் அது தயங்குவதேயில்லை.

அவற்றில் முதலாவதாக, அந்தப் போதை பானம் சீரண உறுப்புக்களைப் பாதிக்கிறது. சீரணிப்பதற்கென்று அங்கே சுரக்கின்ற சீரண நீரினை, அமிலங்களின் சக்தியைக் கெடுத்து விடுகிறது. சுரப்பியையே நிலை தடுமாறச் செய்து விடுகின்றது. குடிகாரர்கள் வெறுங்குடியுடன் விட்டு விடுகின்றார்களா என்ன?

குடியுடன் கூட மீன், முட்டை, கறி இன்னும் பலவாறாக சேர்த்துக்கொள்கின்ற உணவு வகைகள் எல்லாம், கொழுப்புச் சத்தும் புரோட்டீன் நிறைந்தவைகளாகவே இருப்பதுடன், அதனை அதிக அளவும் உண்டு விடுகின்றார்கள். அதன்பின் அவர்களுக்கு என்ன உழைப்பு இருக்கின்றது?

சீரண உறுப்புக்களின் பாதிப்பு, சீரண அமிலங்களின் உற்பத்தியின் குறைப்பு, கடினமான சக்தியுள்ள உணவு