பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塗上望_豐- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் curr*furử : இது, முன்னர்ச் சிறப்புடைத்தென வேண்டிய நாற்சீரடி யினைக் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி யென வகுத்தமையாமாறு கூறினான் (தொல்.செய்-36, 37, 38, 39, 40) இனி அறுநூற்றிருபத்தைந்தென அவைபட்ட விகற்பமுங் கூறியவாறு (இ.ஸ்.) மேற்கூறிய ஐவகையடியினையும் விரிக்குங்காலைப் பொருள்வகையமைந்த பதினேழ்நிலத்து எழுபதுவகைக் குற்ற நீங்கி அறுநூற்றிருபத்தைந்தாம் (எ-று.) எனவே, பதினேழ்நிலத்து எறினும், எழுபதுவகைக்குற்றம் விரவிச்செயினும் அறுநூற்றிருபத்தைந்தெனப்படாவென்பதாம்! பதினேழ்நிலனும் ஆசிரியம்பெறுமென்பது உம், வெண்பாவுங் கலிப்பாவும் ஒரோவொன்று எட்டுநிலம் பெறுமென்பது உம் முன்னர்ச் சொல்லுப. அவை மூன்றுந் தொகுப்ப முப்பத்து மூன்று நிலனாயின. வெள்ளை நிலம் பத்தென்பார்க்கு முப்பத்தைந்து நிலனாம் எழுபது கூற்று வழுவெனப்பட்டன. தளை வழு. தளை வழுவாவன ஆசிரியநிலம் பதினேழனுள் வெண்டளையுங் கலித்தளையுமாகி வேற்றுத்தளை தட்ப முப்பத்துநான்கு தளை வழுவாம். வெள்ளை நிலம் பத்தினும் ஆசிரியத்தளை பத்துங் கலித்தளை பத்துத் தட்ப இருபது தளைவழுவாம். இனிக் கலிநில மெட்டனுள் ஆசிரியத் தளை எட்டுங் கவித்தளை எட்டுந் தட்பப் பதினாறு தளை வழுவாம். இவையெல்லாந் தொகுப்ப முப்பத்தைந்து நிலத்தும் ஒன்றிரண்டுசெய்து, எழுபது தளைவழுவாயினவாறு. இது வெள்ளை நிலம் பத்தென்பாருரை.2 i. ஒரடிக்கு எழுத்தின் பேரெல்லை பதினேழெழுத்து என்னும் அளவினக் கடந்து எழுத்துமிக்குவந்தாலும் எழுபதுவகையின் வழுவிக் குற்றம் விரிவி வந்தாலும் அறுநூற்றிருபத்தைந்து' என்னும் அடி வரையறை கொள்ளப்படாது என்பதாம். 3. இத்தொல்காப்பியச்சூத்திரத்திற்கு இங்ங்னம் உாைகாண்போர் கூறும் விளக்கம் யாப்பதுங்கலவிருத்தியில் இடம் பெற்றுள்ளமை காணலாம். - - - ة مهم بهم و عب " 盗 (。 جیر پی "எழுபது வகையின் வழுவிலவாகி என்னுத் தொல்காப்பியத் தொடரில் எழுபதுவகை என்பது சீர்கள் அடியாகுமிடத்துப் பொருத்திய சீர்களின் r९ தொகையினையே குறிப்பதாகும் என்பது இளம்பூரணர் முதலிய உரையாசிரியர் கசின் கருத்தாது அங்ஙனம் கொள்ளுமிடத்து எழுபதுவகையின் வழுவிலவாகி