பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் کی تجويدي سيلي இவை நான்கடியும் நாலெழுத்து மாசெல்சுரம் நின்றுறழ்ந்த அடி. 'மழைபெய்தென வான்வெள்ளென்று” என்பது எட்டெழுத்தடி. “தழைபச்செனுந் தண்ணென்காவு' என்பது ஒன்பதெழுத்தடி “கமழ்பூந்துணர் கள்ளவிழ்தொறும்’ இது பத்தெழுத்தடி. 'இமிழ்துங்கிசை யிசைசுருப் புவர” என்பது பதினோரெழுத்தடி இவை நான்கும் ஐயெழுத்துப் புலிசெல்சுரம் நின்றுறழ்ந்த ه - لایه இனி ஒன்பதெழுததுமுதற் பன்னிரண்டளவும் உயர மற்றையனபோல நான்கடி பெறும், “அமைவிடுகொடி யஞ்சியோர்ந்து' என்பது ஒன்பதெழுத்தடி. 'கனைகுரலன கானத்தளகு' என்பது பத்தெழுத்தடி. 'தினைப்புனத்தித ணயற்பிரியாது’’ என்பது பதினோரெழுத்தடி. “மனைக்குறமகள் கடைப்புறந்தரும்’ என்பது பன்னிரண்டெழுத்தடி. இவ்வாறே ஒழிந்தனவும் உறழ்ந்து கொள்க. மூன்றுடாவின்றுணைச் சிறப்பின்மையின் வஞ்சியடி ஈண்டுப் போதந்து கூறினானென்பது, ஒழிந்த முச்சீரடி சிறுவரவிற்றாகலின் அதற்குக் கூறிய திலனென்பது ? (ருஎ) 1 - gpgjgjaagri என்ற தொடரை எழுவாயாகக் கூட்டிப் பொருள் கொள்க. 2. ஆசிரியம், வெண்பா, கலியென்னும் மூன்று பாக்களின் அடி களை நோக்க வஞ்சிப்பாவின் அடிகள் அத்துணைச் சிறப்பிலவாதலின் இங்கு அவற்றின் பின் வஞ்சிப்பாவின் அடிகளைக் கூறினார் ஆசிரியர். வஞ்சிப்பாவுக்குரிய குறள் சிந்து என்னும் இருவகையடிகளில் இருசீரடியாகிய குறளடியே பெரும்பான்மையும் பயிலச் சிந்தடியாகிய முச்சீரடி சிறுபான்மையாய் வருதலின் அதனை இங்குக் கூறாது விட்டார்.