பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీr: ఇక్త தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் கூடாமுன் ஊடல் கொடியதிறங் கூடினால் ஆடாளோ ஆர்க்கலர் வந்து ; எனவாங்கு, ஈப்பா யடுநறாக் கொண்டதிவ் வியாறெனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு: மைந்தர் மகளிர் மனைவிரை பூசிற்றென் றந்தணர் தோயலர் ஆறு: வையைத் தேமொழி வழுவழுப் புற்றன ஐயர்வாய் பூசுறார் ஆறு: -- விரியுரி விரைதுறை கரையழி பிழியூர ஊர்தரும் புனல் கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர்தரு.துரை நுரையுடன் மதகுதொ றிழிதகு புனல்கரை புரளியசெலுமறிகடல் புகுமள வளவிய லிச்சிறை துணிவின்று வெள்ளமிகை; வர்ைபல் புரை யுயர் கயிறனி பயிறொழில் மணியணி யானையிசை மைந்தரும் படைவாரும் நிர்ைநிரை குழிஇயின்ர் உடன்சென்று குருமனி யானை இயறேர்ப் பொருநன் திருமருத முன்றுறை முற்றங் குறுகித் தெரிமருதம் பாடும் பிணிதோள் யாழ்ப் பாணர் பாடிப் பாடிப் பாய் புனல் ஆடி யாடி யருளியவர் ஊடி யூடி புணர்த்தப் புகன்று கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடிச் சிதைபுசிதை பூச் சூடிச் சூடிக்கை தொழுது தொழுதும் இழுதொடு நின்ற புனல் வையை விழுதொகை நல்லாரு மைந்தரும் ஆடி இமிழ்வது போன்றதிந் நீர்குணக்குச் சான்றீர் முழுவது மிச்சிலா உண்டு; சாந்தும் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமுங் கூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன பூவினு மல்லாற் சிறிதானு நீர்நிறந் தோன்றா திவ்வையை யாறு;