பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

්්r தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரைவளம் இதனால், இசைப்பாடல்களின் அடிப்பெருக்கம் பன்னிரண்டடி யெனவும், பாட்டு முழுவதும் உள்ள அடிகள் சீர்வகையால் ஒத்து வருதலின்றி மிக்கும் குறைந்தும் வருதலும் உண்டெனவும் கொள்ளப்படும். இனி, இச்சூத்திரத்திற்கு, "நாற்சீரடியின் மிக்கு வரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ், வடியின் வேறுபட்டு வருவனவும் கொள்ளப்படும். எனப்பொருள் கொண்டு, இதனாற் சொல்லியது, இருசீரடி முதலிய எல்லா அடிகளானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறு' எனவும், 'பன்னிரண்டாவன: ஆசிரியம், வஞ்சி, வெண்பா கலி எனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடும் தாழிசை' துறை, விருத்தம் என்னும் மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம்” எனவும், இவையெல்லாம் உரையிற்கோடல்: என்பதனாலும் பிறநூன் முடிந்தது. தானுடம்படுதல்’ என்ப தனாலும் கொள்க’ எனவும் விளக்கங் கூறுவர் இளம்பூரணர். அவ்வாசிரியர் அடியிகந்து (நாற்சீரின்மிக்கு) வருவனவாகக் கூறிய பாவினங்கள் பன்னிரண்டனுள், வெள்ளொத்தாழிசை, கலித்தாழிசை என்பன பெரும்பாலும் நாற்சீரடியால் இயன்று. வருதலாலும், கலிவிருத்தம் யாண்டும் நாற்சீரடியேயாய் வருதலாலும், அவை அவர் கருத்துப்படி அடிநிமிர்கிளவி யெனப்படா வாதலாலும், நான்கு பாவினோடும் தாழிசை துறை விருத்தம் என்னும் மூன்றனையும் உறழ்ந்து காணப் பாவினம் பன்னிரண்டாம் என்ற பாகுபாடு இச்சூத்திரத்தில் இடம்பெறாமையாலும், இங்குச் சொல்லப்பட்ட தாழிசை, துறை விருத்தம் என்னும் மூவினப் பெயர்களுள் தாழிசை என்பது ஒன்றுமட்டுமே ஆசிரியர் தொல்காப்பியனாரால் கலிவுறுப்புக்களுள் ஒன்றாக வைத்துரைக்கப்படுவதன்றித் துறை, விருத்தம் என்பன செய்யுள் வகையாகத் தொல்காப்பியத்திற். குறிக்கப் படாமையாலும் இச்சூத்திரவுரையுள் இளம்பூரணர் வகுத்துக் காட்டிய பாவினப்பாகுபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதன்றென்பது. நன்கு தெளியப்படும். அன்றியும் இசைத் தமிழ்ப் பாடல் வகையாகிய பண்ணத்தி. யினைத் தழுவிப் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்களால் வகுத்துரைக்கப் பெற்றதே பாவினப் பாகுபாடென்பதும் '! ա} ன்பதும், பிற்கால யாப்பிலக்கண நூலார்