பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வாகக. 戏、韶门 கரும நிகழ்தலாவது-அப்பொருளைப்பற்றி யாதானு மொரு வினை நிகழுமிடம் இன்னுங் கருமநிகழ்ச்சி என்றதனால் தன்மை முன்னிலை படர்க்கை யென்பனவுங் கொள்ளப்படும் “செல்லாமை உண்டேல் எனக்குரை' மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை' (குறள்கருக்) என்றவழிப் பிரிவுப் பொருண்மை நிகழும் இடமாயிற்று. முன் னின்றானைக் கூறுதலின் முன்னிலை யென்னும் இடமாயிற்று யாதானுமோர் கருமநிகழ்வுழி அதற்காகும் இடத்தொடுங் கூட நிகழ்தல் வேண்டுமென்று இப்பொருள் கூறப்பட்டது. ஒருநெறிப்படாதும் ஓரியன் முடியாதும் வருமிடம் வழுவாம். அஃதாவது, தலைமகளொடு புணர்தல் வேண்டித் தோழியை யிரந்து குறையுறுவான் அவ்விடத்திற்குத் தக்கவுரை கூறாது தன்னாற்றலும் பிறவுங் கூறுதல். "மெல்லியல் நல்லாருள் மென்மை அதுவிறந் தொன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை யெல்லாஞ் சலவருட் சாலச் சலமே நலவருள் நன்மை வரம்பாய் விடல்.” (நாலடி. க. அ.அ) இதனாணு மறிக. அன்றியும், 'நெடும்புனலுள் வெல்லு முதலை அடும்புனலுள் நீங்கி னதனைப் பிற” (குறள். சக்ரு) இதுவும் இடனறிதல். உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார்.” (குறள். கூஉ.உ) இது தன்மையானையும் முன்னின்றானையும் ஒழித்துப் படர்க்கையானைத் தொழிற்படுத்துதல். உண்ணற்க வென்னும் படர்க்கைச்சொல் படர்க்கைப் பெயரொடு முடிந்தது. பிறவு மன்ன. (க.க கட) இது, களனெனப்பட்ட உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்) பலவும் ஒருவழிப்பட்டு ஓரிலக்கணத்தான் முடியுங் கருமநிகழ்ச்சியை இடமென்று கூறுப (எ-று).