பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உன.உ శ్రీ :ఖీ இது மாட்டென்னும் உறுப்புக் கூறுகின்றது. மாட்டுதலாவது கொண்டு வந்து கொளுத்துதல். (இ-ள்.) அகன்னும். எமது பொருள்கொள்ளுங்கால் அகன்று பொருள் கிடப்பச் செய்யினும், அணுகிக்கிடப்பச் செய்யினும், இயன் தல் எது இவ்விருவகையானுஞ் சென்று பொருண்முடியுமாற்றாற் கொண்டுவந்து கூட்டி யுரைப்பச்செய்தல், மாட்... கின் எது மாட்டென்னும் உறுப்பென்று கூறுவர் செய்யுள் வழக்கினுள். எ-று. இது மொழிமாற்றுப்பொருள்கோளன்றிப் புலவர் வேறு செய்வதோர் செய்கை. இது பலபொருட்டொடராற் பலவடியான்வரும் ஒருசெய்யுட்கண்ணும், பலசெய்யுளைப் பலபொருட் டொடரால் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும். உ-ம். முருகாற்றுப்படையுள்

  • மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்

கிண்கிணி கவைஇய, வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட் கோபத் தன்ன தோயாப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்கா ழல்குற். கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர் தீர் மேணித் துணையோ ராய்ந்த விணையி ரோதிச் செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக் கிளைக்கவின் றெருழுத கீழ்நீர்ச் செவ்வரும் பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்