பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/845

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கCங்ச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவுளம் உங்க ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது: குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து • ஓங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின்? இழையின் இலக்கணம் இயைந்த தங்கும். இனாம்பூரணம் : என் . எனின் நிறுத்தமுறையானே இழைபாமாறு உணர்த் துதல் நுதலிற்று. (இ-ள்) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்தடக்காது ஆசிரியப் பாவிற் கோதப்பட்ட நாலெழுத்தாதியாக இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழு நிலத்தும் ஐந்தடியும் முறையானே வரத்தொடுப்பது இழைபு என்னும் செய்யுள்ாம் என்றவாறு. உ.ம் பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு நீங்கி நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய் ஊதை வீச ஊர வாய மதியோர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னல் லூர அமையேர் வளைத்தோள் அம்பரி நெடுங்கண் இண்ைபீர் ஒதி ஏந்திள வனமுலை இரும்பன் மலரிடை எழுந்த மர்வின் நறுந்தழை துயல்வருஞ் செறிந்தேந் தல்குல் அணிநகை நசைஇய அரியமர் சிலம்பின் மணிமருள் வார்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடையலள் கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொரு நீ மறைப்ப ஒழிகுவ தன்றே (யாப். வி. ப. க.அC) என வரும். (உங், ச) 1. 'ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது" என்றமையான் ஒற்றொடுபுணராத வல்லெழுத்து வரும்ென்றார்ாயிற்று. 2. ஆங்கனமொழுகின்' எனப் பேராசிரியரும் ஆங்கனமொழுகின்' என நச்சினார்க்கினியரும் பாடங் கொள்வர்.