பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選28 தொல்காப்பியம் க்க. நிலம் தீ நீர்வளி விசும்பொ டைந்துங் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இவனெறி வழாமைத் திரிவில் சொல்லொடு தழா அல் வேண்டும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் இதுவுமோர் மரபு உணர்த்து தல் நுதலிற்று. (இ- ள்) உலகு நிலமுதலாகிய ஐம்பெரும்பூதங் கலந்த மயக்கமாதலான் மேற்சொல்லப்பட்ட பொருள்களைத் திணை யும் பாலும் வழாமல் திரிபுபடாத சொல்லோடே தழுவுதல் வேண்டும் என்றவாறு.1 கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற்போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றாதல் போறல். உலகமென்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியுங் கலந்தாற்போல நிலம் நீர் தீவளி ஆகாயம் என விரவிநிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றானற்போல வேற்றுமைப் படாது நிற்கும். அவ்விரண்டினையும் உலகம் உடைத்தாகவிற் கலந்த மயக்கமென்றார். இப்பொழுது எல்லாவுலகத்தையும் விட்டு நீங்காமையின் இவற்றை ஒருமுகத்தான் நோக்க வேறுபாடிலவா மாதலான் மேற் கூறிப்போத்த முறையினான் வேறுபடுத்து இருதிணையாக வும் ஜம்பாலாகவும் இயன்ற நெறி வழுவாமைத் திரிபுபடாத சொல்லோடே புணர்க்க என்றவாறாம். சாத்தன் சோற்றை உண்டான் என்பது. இது உண்டற் குரியானெனக் கூறுதலின் மரபாயிற்று. அஃதேல் வழாமை தழால் வேண்டுமெனக் கருதியபொருள் முடியும்; திரிவில்சொல் என்றது 1. இருதினை, ஐம்பால் இயல்நெறி வழாது திரிபில்லா மரபுச் சொற்களால் உலகப்பொருள்களை உணர்த்துதலின் இன்றி யமையாமையினை வற்புறுத்துகின்றது.