பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 盘够窃 முடிவதென்றான், அதனாற் பரந்துபட்ட சூத்திரத்தினை அங் வனம் மறுத்துச் செய்யாது தொகுத்துக் காண்டி கையான் உரைக்குங்கால் உட்பொருளெல்லாம் விளங்காமற் கரந்துசெய் தலும் உண்டென்பது கொள்க ; அது, 'வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும்’ (தொல்-புறத் 5) என்பது முதலாக இக்கூறப்பட்ட இருபத்தொரு துறையுங் கரந்தை யெனப்டுமென்றாற்போல மாட்டென்னுஞ் செய் புளுறுப்பினைத் தோற்றுவாய் செய்துவிடுதல். பிறவும் அன்ன ஆய்வுரை : இது காண்டிகையாவது இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்) குற்றமில்லாத சூத்திரம் சொன்ன இயல்பினால் மறைப்பின்றிப் பொருளை விளக்குவது காண்டிகையாகும் எ-று) - (ද්o F) க ச விட்ட கல்வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங் கமைந்த மெய்ந்நெறித் ததுவே. இளம்பூரணம் : இதுவுமது (இ-ன்) சூத்திரத்திற்படுஞ் சொற்பொருளை விட்டு நீங்கு தலின்றி விரிவோடே பொருந்திக் குறித்த சூத்திர முடித்தற்காக ஏது நெறியானும் எடுத்துக் காட்டினானும் பொருந்தியாங்கமை யும் பொருனெறியை யுடைத்துக் காண்டிகை யென்றவாறு. விட்டகல்வின்றிவிரிவொடு பொருந்தலாவது மிக அகலாமை, இம்மனை நெருப்புடைத் தென்றது சூத்திரப்பொருள்; புகையுடைத் தாதலானென்பது ஏது? அடுக்களைபோலவென்பது எடுத்துக் காட்டு. இவ்வகையினாற் சூத்திரப் பொருளுரைக்க வென்றவாறு. E s FTSÄfzs no: இது, மேலதற்கொரு புறனடை, எய்தியதன்மேற் சிறப்பு விதியுமாம். என்னை? காண்டிகையை மேலதனோடு இருவகைய என்றமையின்.