உவமையியல்-நூற்பா உக ぶ。g了
யோர் உள்ளுறையுவமங்கூறுங்கால், தாம் தாம் அறிந்த சொல்லா லும் நிலம் பெயராத பொருளாலும் அந்நிலத்துள்ள பொருளாலும் உள்ளுறையுவமை சொல்லுவதற்குரியர் என்பதாம்.
ல். இனிதுறு கிளவியுப துனியுறு கிளவியும் உவம மருங்கில் தோன்றும் என்ப
இளம் பூரணம்
என் - எனின். இது தலைவற்குந் தலைவிக்குந் தோழிக்கு முரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்) மகிழ்ச்சி பயக்குங் கூற்றும் புலவிபயக்குங் கூற்றும்
உவமப்பக்கத்தால் தோன்றும் என்றவாறு .'
"மாரி யாம்பல் அன்ன கொக்கின்
பார்வ லஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர் கயிறிரி யெருத்திற் கதம்பூந் துறைவ’’ (குறுந், ககஎ) என்றது தலைமகள் உவமை கூறியவழி நின்ற பெண்டிர் தடுப்பக் கரியிறி யெருது போலப் போந்தனை யெனத் துனியுறு கிளவி வந்தது.
“... ... ... வானத்
தணங்கருங் கடவு ளன்னோள் நின் மகன்தா யாதல் புரைவதால் எனவே’’ (அகம். கசு)
என மகிழ்ச்சிபற்றி வந்தது. பிறவும் அன்ன. (Ε. o)
- ேராசிரியம்
இதுவும் மேலதற்கே யாவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.
1. இனிதுறு கிளவி- மகிழ்ச்சிவிளைககுஞ்சொல்.
துனியு கிளவி- புலவி விளைக்குஞ்சொல், 2. "கின்ற பெண்டிர்' என்னும் உரைப்பகுதியை கின் பெண்டிர் எனத் திருத்திப் படிப்பின் பொருள் இனிது புலனா ,