பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢ ప్రొ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

என்றவழி, அகத்துத் தோன்றும் மறுப்போலப் புறத்துமறுமதிக் கில்லையென்பது உம் புறமதியோலக் கறைதீர்ந்த முகமென்பது உம் உவமப் பொருளின் உற்றதுனருந் தெளிமருங் கென்றதனாற் கோடுமோவெனின், அங்ங்னங் கொள்ளாமைக்கன்றே வருகின்ற சூத்திரமென்பது". (2-o)

-ខ្សែយ៉ថា ភាវ

இஃது, உவமையினால் உவமேயத்திற்கு வந்துபொருந்துவ தோர்திறம் உணர்த்துகின்றது. (இ-ள்) உவமையெனப்பட்ட பொரு ளால் உவமிக் கவரும் பொருளாகிய உவமேயத்திற்கு உறுவதனை யெல்லாந்தெளிந்து துணியும் பொருட்பகுதியும் உள்ளன; அவ்வாறு துணிந்துரைக்கப்படும் பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கணவகை யால் எ-று.

தெளிமருங்கு-தெளிந்து துணியும் பக்கம்.

பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கணமாவன, மேற்கூறியவாறு எண்வகை மெய்ப்பாடும்பற்றி உவமம் கொள்ளுங்கால் உவமான அடைமொழிக்கு உவமேய அடைமொழி குறைந்து வருவனவும், யாதும் அடைமொழியின்றிவருனவும் ஆகிய இவ்விரண்டும் உவமே யத்திற்கு உற்ற தன்மையிதுவெனவுணரவியலாமல் அமைந்தநிலை யிலும், உவமேயத்திற்கு உற்றதனையுணர் தற்கும் அவ்வுவமையே தெளியும் பக்கத்ததாம் எனவும், அடைமொழியின்றி உவமைகூறி உவமையிடை உவமேயத்திற்கமைந்த பொதுத்தன்மையிதுவென விளங்கவிரித்துரையாத நிலையிலும் அவ்வுவமையே உவமேயத்தின் இயல்பினைத் தெளிந்துணர்தற்குரிய பகுதியாம் எனவும் உணர்த்து வார், தெளிமருங்குளவே திறத்தியலான' என்றார். உவமையொடு உவமேயத்திற்குள்ள வினை பயன் மெய் உரு என்னும் ஒப்புமைப்பகுதி யோடுநகை முதலியன எண்வகை மெய்ப்பாடுகளும் உவமத்திறத்தால் உவமேயப் பொருட்டு வந்துறுவனவாகத் தெளிந்துதுணியும் பகுதியும் உள்ளன என அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது இச்சூத்திரமாகும்.

1. மதியின் அகத்துத்தோன்றும் மறுப்போல மதியின் புறத்துமறு வில்லையா

தலின், மறுவில மதியேன் பொருள் தோன் றப் புற திபோன் றமுகம் என 4. வகங்கூறுதல், உஸ்மப்பொருளின் உற்ற துனருந் தெளிமருங்கு எனக்கொள் எ லாமோ? என வினவினால் க்குப் புறமதி' என்ற உவமை உலக வழக்கொடு மருவி வந்ததன் றா கலின் அங்கனக் கொள்ளுதல் கூடாதென்பதனை அறிவுறுத்துவதே

- شده است. .. ؟ ہی یہ۔ :. ~ * : ... ל. ריי வருகின் சூத்திரம் வி ை-யிறுத்தவாறாம்.