பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசு தொல்காப்பியம் - பொருளதிகாரம்

தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக் கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளி வருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனெப் பரந்துபடு பாயல் நவ்வி பட்டென இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண் டின்னகை இணையம் ஆகவும் எம் வயின் ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுத னிவி நறுங்கதுப் புள்ளிய நன்னர் அமயத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற அலமரல் போற்றா யாகலிற் புலத்தியால் எம்மே” (அகம்.) இதனுள் வறுங்கை காட்டிய வாயல் கனவினென நன வின் றிச் செனறவற்றைத் தலைவன் கூறியவாறு காண்க. இதுவும் இருவர்க்குமாம். -

அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் செயற்கு அரிதாகிய வினையை முடித்த தலைமையை எய்திய காலத்தே தலைவி விருந்தெதிர் கோடலோடே நீராடிக் கோலஞ்செய்தல் முதலியவற்றைக் காண்டல் வேண்டிய இடத்தும்: தலைவன் கூற்று நிகழ்த்தும்.

'முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்...... - விருந்தயர் விருப்பினள் வருந்து ந் - - திருந்திழை யரிவைத் தேமொழி நிலையே."(நற்றிணை, 374) என இதனுள் விருந்தயர் விருப்பினளென விருந்தொடு நல்லவை வேட்டுக் கூறியவாறு காண்க.

மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்-வினைமுற்றிப் புகுந்த தலைமகனை எதி ரேற்றுக்கொள்ளும் மங்கலமரபினர் மாலையேந்திய பெண்டிரும் புதல்வருங் கேளிரும் ஆகலான் அக் கேளிர் செய்யும் எதிர்கோட லொழுக்கத்துக்கண்ணும்: தலைமகன் உள்ள மகிழ்ந் துரைக்கும். உம்மை விரிக்க. பெண்டிரும் மக்களுமாகிய கேளி ரென்றுமாம்.

1. கேளிர் என் புழிக் கேளிரும் என உம்மை விரிக்க.