பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா கக ఉ3 .

என்பது, மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

வேட்கையுரையாத கண் உலகத்தின்மையால் தலைவன் ஏமுறற் பொருட்டு நானும் மடனும் உளவாம் என்றவாறு.

இதனாற் சொல்லியது மேல் தலைவிக்கு இயல்பாய்க் கூறப்பட்ட அச்சமும் நாணும் மடனும் என்பனவற்றுள் வேட்கையால் அச்சம் நீங்கினவழி நாணும் மடனும் நீங்காவோ என்றையுற்றார்க்கு அவை தலைமகற்கு ஏமமாதற்பொருட்டு நீங்காவாம் என்பது உம், வேட்கைக்குறிப்புக் கண்ணினான் அறியலா மென்பது உம் உணர்த்தியவாறு. என்னை? நானும் மடனும் இல்லாதாரைத் தலைமக்கள் அவமதிப்பாாதலால். உதாரணம் :

'கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில். ' (குறள். 1173)

இதனுள் கடலன்ன காமம் உழந்தும்’ என்றதனான் வேட்கை மிக்க நிலையினையும், மடலேறாப் பெண்’ என்றமையான் நானும் மடனும் நீங்கா நிலையினையும் கூறுதல் காண்க.

'கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல. ’’

இதனுள் அகத்துநிகழ் வேட்கையினைக் கண்ணினால் அறியக்கிடந்தமை கூறியவாறு கண்க. (க.க)

நச்சினார்க்கினியம்

இது கருமநிகழ்ச்சிக்கண் வரும் நானும் மடனுந் தந்தன்மை திரிந்துவரு மென்கின்றது.

(இ.ஸ்.) சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக் கூற்று நிகழாத காமம் புலனெறி வழக்கின் கணின்மையின், இரண்டும் ஏமுற நாட்டம் உளவென மொழிப-முற்கூறிய நானும் மடனுந் தந்தன்மை திரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர் எ-று. '

1. இந்நூற்பாவிற்குச் சொற்கிடந்த முறையே போருள் கொள்ளாது தொடர் மொழிகளை முன் அமைந்த இயல்புக்கு முரண்பட மாற்றி கச்சினார்க்கினியர் கூறும் பொருள் நூலாசிரியர் கருத்துக்கு ஒவ்வாததாகும்.