பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கி தொல்காப்பியம்-பொருளதிகாரம்

பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல்-தன் கற்பிற்கு வரும் பழி தீர்ந்த தன்மையால் தன்கண் தோன்றிய மகிழ்ச்சியைச் சிறிதே தோழிக்குத் தோற்றுவித்தற்கண்ணும் :

தலைவனால் தோன்றிய நோயும் பசலையும் முருகனால் தீர்ந்ததென்று அவன் கேட்பிற் கற்பிற்குப் பழியாமாதலிற் பழி' யென்றார்.

உ-ம்: 'அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங்

கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் இதுவென வறியாள் மறுவரற் பொழுதில் படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேனத் தனிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூறக் களனன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள் ஆர நார வருவிடர்த் ததைந்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனை நெடுநகர் காவல ரதியாமைத் தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்கு தொறு மெய்ம்மலிந்து நக்கனென் அல்லனோ யானே எய்த்த நோய்தணி காதலர் வரஈண் டேதில் வேலற் குலந்தமை கண்டே." (அகம்.22)

இதனுட் பழிதீர அவன் வந்து உயிர்தளிப்ப முயங்கி நக்க நிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க.

கைப்பட்டுக் கலங்கினும் - தலைவி குறிப்பினன்றி எதிர்ப்பட்ட தலைவன் ஒருவழி அவளை அகப்படுத்தவழிக் காட்சி விருப்பினளிாயினும் அப்பொழுது அவள் கலங்கினும் :