பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உச - 剷瀏舒

வருதல் வாய்வது வான் றோய் வெற்பன் வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைத் தாழ்வ லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற் நூசன் மாறிய மருங்கும் பாய்யுடன் ஆடா மையிற் கலுழ்பில தேறி நீடிதழ் தலைஇய கவின் பெறு நீலங் கண்ணெண மலர்ந்த சுனையும் வண்பறை மடக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்குரற் குவவுப் பொறை யிறுத்த கோற்றலை யிருவிக் கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்து பைதலன் பெயர்கவன் கொல்லோ ஐதேய்கு அயவெள் ளருவி சூடிய வுயர்வரைக் கூஉங் கண்ணதெம் மூரென ஆங்கதை யறிவுறன் மறந்திசின் யானே. (அகம், 38)

இதனுள் ஊசன்மாறுதலும் புனமுந் தன்குறி தள்ளிய இடன்: மறந்திசின் என்றது தெருளாக்காலை, கூஉங்கண்ணது ஊரென உணர்த்தாமையின்; இடையீடு படுவதன்றி அவன்கண் தவறுண். டோவெனத் தன் பிழைப்பாகத் தழீஇயினாள். இது சிறைப்புறமாக வரைவுகடாயது.

வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும் - வழுப்படுத்தலின்றி நின்ற இயற்பட மொழிதற் பொருண்மைக் கண்ணும் :

வழுவின்றி நிலைஇய என்றதனால் தோழி இயற்பழித் துழியே இயற்பட மொழிவதென்க. தலைவன் வழுவைத் தோழி கூறியதற்குப் பொறாது தான் இயற்பட மொழிந்த தல்லது, தன் மனத்து அவன் பரத்தைமை கருதுதலுடைமையிற் பொருள் வேறு குறித்தாளாம்.

இஃது அகன்று உயர்ந்து தாழ்ந்தவற்றுட் பெரிதாகிய நட்புடையவன் எனக் கூறியது. ஒருகாலைக்கு ஒருகாற் பெருகு மென்றுங் கூறினாளாயினும், நமது நட்புப்போல் ஒரு காலே பெருத்த தில்லையென இரண்டுங் கூறினாள்.'

1. இரண்டும் . மேற்குறித்த அவ்விரண்டும்.

'சிங்தை என்றது ஈண்டுப் பல்வேறு சிந்தனைகளாகிய தவறு தலைக் குறித்தது.