பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுல் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

அஃது எஞ்ஞான்றுங் கூட்டம் பெற்றமையான் மகிழ்ந்து கூறுதலாம்.

உசம் : தோயலைக் கலங்கிய மதனழி பொழுதில்

காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும் யானென், பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கிக் கைவல் கம்மியன் கவின் பெறக் கழாஅ - மண்ணாப் பசிமூத் தேய்ப்பக் குவியினர் ப் புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் என்ன மகன்கொல் தோழி தன்வயின் ஆர்வ முடைய ராகி மார்பனங் குறுநரை யறியா தோனே (நற்றிணை,94)

"மண்ணாப் பசுமுத்தே ய்ப்ப நுண்ணிதிற்றாங்கிப் பெண்மை தட்ப வென மாறிக் கழுவாத பசிய முத்தந் தனது மிக்க ஒளியை மறைத் துக் காட்டினாற்போல், யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப், பெண்மையாற் றகைத்துக் கொள்ளும்படியாகத் தன் மார்பால் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகனென்று சொல்லப்படுமென மகிழ்ந்து கூறினான். ஆர்வ முடையராக வேண்டி மார்பணங்குறுநரை அறியாதோனென்க. அலராமற் குவிந்த கொத்தையுடைய புன்னைக்கண்ணே புலானாற்றத்தையுடைய நீர் தெறித்தரும்பிய சேர்ப்பனென்றதனால், புன்னையிடத்துத் தோன். றிய புலனாற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறுபோல, வரைந்து கொண்டு களவின் கண் வந்த குற்றம் வழிகெட ஒழுகுவனென்பது உள்ளுறை. இரண்டறி களவி” (குறுந்தொகை 312) என்னும், பாட்டினுள் தோற்றப் பொலிவை மறைப்பளெனத் தலைவன் கூறியவாறும் உணர் க.

மறைந்தவற் காண்டன் முதலிய ஆறற்கும் உம்மையும் உருபும் விரித்து, ஏனையவற்றிற்கு உம்மை விரிக்க; உம்மை விரிக்கவேண்டுவனவற்றிற்கு உம்மையும், இரண்டும் விரிக்க வேண்டுவனவற்றிற்கு இரண்டும் விரித்து, அவற்றிற்கு ஏனை வினையெச்சங்கட்கும் கூற்று நிகழ்தலுளவென முடிக்க கூற்று அதிகாரத்தான் வரும். உயிராக்காலத்து உயிர்த்தலு முளவென முடிக்க: