பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శఙ. தொல்காப்பியம் - பொருளதிகாரம்

மன்றல் எட்டாவன: பிரமம், பிரசாயத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.

அவற்றுட் பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானுய் நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னிராட்டைப் பருவத் தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது.

'கயலே ரமருண்கண் கன்னியூப் பெய்தி அயல்பே ரணிகலன்கள் சேர்த்தி-இயலின் நிரலொத்த அந்தணற்கு நீரிற் கொடுத்தல் பிரமமண மென்னும் பெயர்த்து.'

- பிரசாபத்தியமாவது மகம்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டித் தம் மகட்கு ஈந்து கொடுப்பது.

'அரிமத ருண்கண் ஆயிழை யெய்துதற்

குரியவன் கொடுத்த வொண்பொரு எளிரட்டி திருவின் தந்தை திண்ணிதிற் சேர்த்தி அரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல் பிரித லில்லாப் பிரசா பத்தியம்.

ஆரிடமாவது; தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது

'தனக்கொத்த வொண்பொருள் தன் மகளைச் சேர்த்தி

மனைக்கொத்த மாண்புடையாற் பேணி-இனக்கொத்த ஈரிடத் தாவை நிறீஇயிடை ஈவதே ஆரிடத்தார் கண்டமண மாம்.'

- தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒத்த ஒருவற்கு அவ் வேள்வித்தி முன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது:

'நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த

வேள்வி விளங்கழன் முன்நி lஇக்-கேள்வியாற் கைவைத்தாம் பூளுளைக் காமுற்றாற் கீவதே தெய்வ மணத்தார் திறம்.”

1. தக்கினை.ஆசிரியனுக்குத் தரும் கையுறைப் பொருள்.