பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(5 ώ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

புலனாம்; ஆண்டு யாம் இறந்துபடுதலின் இவனும் இறந்துபடுவனெனக் கருதப் பிரிவென்பதும் ஒன்று உண்டெனத் தலைவன் கூறுதல். அவட்கு மகிழ்ச்சியின்றென்பது தோன்ற நகை நளிையுறா" தென்றார். புணர்தல் பிரிதல்’ (தொல், பொ. 14) எனக் கூறிய சூத்திரத்திற் புணர்தலை முற்கூறி ஏனைப் பிரிவை அந்நிலையென்று ஈண்டுச் சுட்டிக் கூறினார். இதனால் தலைவிக்குப் பிரிவச்சங் கூறினார். தண்ணிர் வேட்டு அதனை உண்டு உயிர்பெற்றான். இதனான் உயிர் பெற்றேமெனக் கருதி அதன் மாட்டு வேட்கை நீங்காதவாறு போலத் தலைவிமாட்டு வேட்கை யெய்தி அவளை அரிதிற்கூடி உயிர்பெற்றானாதலின், இவளான் உயிர்பெற்றே மென்றுணர்ந்து, அவண்மேல் நிகழ்கின்ற அன்புடனே பிரியுமாதலின் தலைவற்கும் பிரிவச்சம் உளதாயிற்று. இங்ங்னம் அன்பு நிகழவும் பிறர் அறியாமற் பிரிகின்றேனென்பதனைத் தலைவிக்கு மனங்கொள்ளக் கூறுமென்றற்கு விளக்குறுத்த லென்றார். இதனானே வற்புறுத்தல் பெற்றாம். அஃது அணித்து எம்மிடமென்றும் பிறவாற்றானும் வற்புறுத்தலாம். மேலனவும் பிரிதனிமித்தம்.

உ-ம் : 'கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி

காஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே.’’ (குறுந்.2)

இதனுள் தும்பி’ என்றது முன்னிலையாக்கல்; கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல்; 'கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல்; காமஞ் செப்பாது’ என்றது என்னிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது; பயிலியது நட்பு’ என்றது தந்நிலை யுரைத்தல்.

'பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமோடு உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து இருவேம் ஆகிய வுலகத்து ஒருவே மாகிய புன்மை நாம் உயற்கே. ’’ (குறுந் 57)