பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*8 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தம் மனத்துக் காத்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றன. ாேனத் திரியக் கோடல். மறத்தலாவது, விளையாட்டு முதலிய வற்றை மதத்தல். இயக்கமாவது, செய்திறன் அறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றோடு கூறல், சாக்காடாவது, மடலேறுதலும் வரை பாப்தலும் போல்வன கூறல். இந்த ஒன்பது கிலைகளும், முன்னர்க் கூறிய காட்சி, ஐயம், துணிவு என்ற மூன்தும் சேர்ந்த இப்பன்னிரண்டும் அன்புற்றார் இருவர் துணை பாகக் கூடுவதற்குரிய கிமித்தங்கள் எனக் கூறுவர் தொல்காப்பியர். இவை கிகழ்ந்த பின்னரே மெய்யுறு புனம் சிசி நிகழும் என்பது அவர் கருத்து. மெப்புறு புணர்ச்சி கிகழ்வதிலும் ஒரு வரையறை உண்டு. தலைவி தன் வேட்கையைத் தலைவனிடம் முன்னதாகச் சொல்லு தல் வழக்கம் இல்லை. எனினும், அவள் வேட்கையை ஆராயின் அது புதுக் கலத்தின்கட் பெய்த ச்ே புறத்துப் பொசிந்து காட்டுமாறு: போலும் உணர்வினையுடைத்து என்று கூறுவர் தொல்காப்பியர். தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறர்ே மாக்களின் அறிய ஆயிடைப் பெய்க்ர்ே போலும் உணர்விற் றென்ப.87 என்பது அவர் கூறும் விதி. மேலும், இக்களவு கூட்டி வைப்பார் பிறரின்றித்தனிமையாகவும்பொலியும். ஆதலின்,தலைவன் தலைவி இருவரும், தத்தம் உள்ளக் கருத்தைத் தாமே, புலப்படுத்தும் து துவராக கின்று கூடுதலும் உண்டு என்பது பெறப்படும். எனவே, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் ஆகியவை யாவர் மாட்டும் நிகழ வேண்டும் என்ற வரையறை இல்லை என்பதை அறிதல் வேண்டும். மெய்யுறு புணர்ச்சிக்கு முன் : இவ்விடத்தில் இன்னொரு செய் தியும் அறியத்தக்கது. தலைமகளைத் தனிமையில் எதிர்ப்பட்ட தலைமகன், தனது பெருமையும் அறிவும் நீங்க வேட்கைமீதுர்த லால், மெப்புறு புணர்ச்சியை விரும்பினானாயினும் தலைமகள் மாட்டு நிற்கும் அச்சமும் காணும் மடனும் அதற்குத் தடையா : கிற்கும். அவை நீங்குதற்பொருட்டுத் தலைவன் தலைமகளை முன்னிலைப்படுத்திச் சில கூறுதல் உண்டு. தொல்காப்பியர் இவற்றை, 27. களவியல் - நூற்பா 28 (இளம்.)