பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற்கூட்ட மரபுகள் - 89. பயிறல் என்னும் நூற்பாவில்' இடத்தலைப்பாட்டிற்குரியவையாக எட்டுக் கிளவிகளை முதலிற்கூறி, அதன் பின்னர்ப் பாங்கற் கூட்டத்தின் துறைப்பொருள்களைக் கூறு தற்குக் காரணம் யாதோ என்ற வினா எழலாம். இவ்விரு பேராசிரியன்மாரும் இவ்வாறு: முற்றும் நேர்முரணாகக் கூறும் பொருள் முறையுண்மையைப் பேரரசிரியர் என்னும் உரையாசிரியர் இனிது இணக்கி உண்மைப் பொருள் கிளக்து மயக்கம் தெளிவிப்பர். ஆசிரியர் தொல்காப்பியல் னார் களவு என்னும் கைகோளை உணர்த்துவதற்கு, காமப் புணர்ச்சியும் இடங் தலைப் பாடும் பாங்கொடு தழாஅலுங் தோழியிற் புணர்வுமென்:று) ஆங்ககால் வகையினும் அடைந்த சார்வொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே.' என்று கூறும் நூற்பாவிற்குப் பொருள் எழுதும் பேராசிரியர், காமப்புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடத்தலைப்பாடு நிகழாதெனவும், அவ்விடங்தலைப்பாடு பிறர் பயத்தல் அரிதென்பது அவள் ஆயத் தோடுங் கூட்டிய கூட்டத்தான் அறிந்த தலைமகன் பாங்கனை உணர்த்தி அவனாற் குறை முடித்துக் கோடலும், தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யானாகலின் அதன் பின்னர்த் தோழியாற் குறை முடித்துக் கோடலுமென இக்கான்கு முறையான் திகழுங் கள வொழுக்கம் என்றவாறு’ என்று உரை கூறுவர். இதனுள், காயப்புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடங் தலைப்பாடு நிகழாது என்ற குறிப்பு காணப்பெறுதலை அறிக. ஆனால், இடக் தலைப்பாடு நிகழ்ந்தன்றிப் பாங்கற்கூட்டம் நிகழாது என்றதொரு குறிப்பு காணப்பெறவில்லை. ஆகவே, இடந்தலைப்பாடு நிகழாமலே பாங்கற்கூட்டம் நிகழ்தலும் உண்டு என்பது பெறப்படுகின்றது. மேலும், காமப்புணர்ச்சியை அடுத்து நிகழ்வதென்று கூறப்பெற்ற ஆவ் இடங் தலைப்பாட்டினைத் தலைவன் தன் பாங்கனைக் கொண்டு குறை முடித்துக்கொள்வான் என்றதொரு குறிப்பும் ஆதனில் தொனிக்கின்றது. எனவே, பாங்கன் என்பான் அவ் இ-க் தலைப்பாட்டிற்கு வாயிலாவான் என்பது தெளிவாகின்றது. பாங்கன் வாயிலாகவே, அவ்வாற்றான் அவன் கூட்டமாகிய பாங்கற்கூட்டமும் அதற்கு வாயிலாக அமைகின்றது என்பதும் உடன் தெளிவாகின்றது. எனவே, பாங்கற்கூட்டம் கிகழ்ந்தாலும் ஆக்கூட்டம் ஒரு கருவியின் அளவாகவே நிற்ப, ஆண்டும் கிகழ்வது 10 களவியல்-நாற் 11. (இளம்). 11. செய்யுளியல்-136 (பேரா).