பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭵ QᎦ தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை f அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தவே மாட்டாள். விரைவில் அவர்கள் ஊரார் அறியத் திருமணம் புரிந்துகொண்டு கற்பு கெறியில் வாழ்க்கை கடத்தவேண்டும் என்ற பெருவிருப்பினை யுடையவளாகவே இருப்பாள். எனவே, அதற்கு வேண்டிய திட்டங் களை வகுப்பதில் அவள் அறிவுத்திறம் மிக்கவளாகக் காணப் பெறு: கின்றாள். வரைவு கடாதல் தலைவன் இருவகைக் குறிகளிலும் பல காலும் வங்தொழுகுங்கால் தோழிக்கும் தலைவனுக்கும் சில உரையாடல்கள் நிகழும். இனியும் இவ்வாறெல்லாம் களவிலேயே வந்து தலைவியைக் கூடும் வழக்கத்தை விடுத்து விரைந்து மணம் செய்துகொள்ள வேண்டும் என்று தலைவனை வேண்டிக்கொள்ளும்: முறையில் இவ்வுரையாடல்கள் நடைபெறும். இதுவே வரைவு கூடாதல்’ என்பது: அஃதாவது, தலைவன் தலைவியை மணந்து கொள்ளுவதிைப்பற்றி உசாவுதல். இக்களவு வெளிப்படச் சுற்றத். கார் இற்செறிப்பரோ என்றும், வழியாலும் பொழுதாலும் ஏதம் வருங்கொல் என்றும் தோழி அச்சமுற்று, இவ்வாறு: களவொழுக்கம் ஒழுகல் தும் குடிப்பிறப்புக்கும் சிறப்புக்கும் பொருங் தாமையின் இனி விேர் இவளை மணந்துகொள்வதே தகுதி என்று: தலைவனை வரைவுகடாவத் தொடங்குவள், முன்பெல்லாம் தலைவன் தோழியைக் குறையிசக்தானாக, பகற்குறிப்புணர்ச்சி யின் பின் தோழி தலைவனைக் குறையிரப்பாளாயினள். இஃது உலகியல் வழக்கமாகும். இவ்வாறு தோழி தலைவனைப் புணர்ச்சி யின் பின் வணங்கி வேண்டிக்கொள்ளு முறையினைத் தொல்காப், பியனாரும், புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும்." எனறு குறிப்பிடுவா. இவ்வரைவுகடாதல் பற்பல ஏதுக்கள் காட்டிக் கடாவப்படுதலின் அது பல வகையாக விரியும். தோழி வரைவுகடாவும் முறை குறிப்பினால் வரைவு கடாவுதல், வெளிப்படையினால் வரைவுகடாவுதல் என்று இருவகைப்படும் எனக் கூறுவர் இறையனார் களவியலுரையாசிரியர." குறிப்பாவது, தோழி தலைமகனை கோக்கி, எம் அன்னை தலைமகளது வேறுபாடு கண்டு, இஃது இவட்கு எதனால் வந்தது என்று: ஆராய்வாளாயினள்' எனப் பொப் பெய்து கூறுதல் போல்வது. இதனால் தலைவியைத் தம் அன்னை இற்செறிக்கக்கூடும் எனவும். அதற்கு முன்பு வரைந்துகொள்ளுதலே சால்புடைத்து எனவும் سبت بمبیی هستمحمد 3. களவியல் - நூற் 24 (இளம்) (அடி - 16.) சி. இறை. களவியல் நூற்பா 18 - இன் உரை,