பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

請Sé தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அசங்க திகழ்ச்சிகளிலேயே ஈடுபட்டிருக்கும். அரங்க நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் பொதுமகளிராக இருப்பின் எத்தனையோ செல்வர்கள் கயங்கி அப் பொதுப் பெண்டிர்களுடன் உறவு கொள் தையும் காண்கின்றோம். இப்பணத்தையிற் பிரிவுபற்றிக் கருத்து வேறுபாடுகளும் உள. சிலச் பண்டைத்தமிழர்களிடம் இப் பரத்தையிற்பிரிவே இருந்ததில்லை என்று கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் காடக வதக்காகப் புலவர்களால் படைத்து மொழியப்பெறும் தலைவர்களிடம் இக்குறை இல்லாமலிருந்திருக்கக் கூடும்; உலகில் கடமாடும் சாதாரண மக்களிடம் பரத்தைமாட்டுச் செல்லுங் குனம்-பரத்தைமை-சிறிதும் இருந்ததில்லை என்று கூறுவது அவ்வளவு:பொருத்தமாகத் தோன்றவில்லை. அவ்வாறு கூறுவோர் கணித இயல்பையும் உளவியற் பண்புகளையும் சரியாக அறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசிரியரும் திருக்கோவையார் உரையில் பரத்தையிற்பிரிவு' என்னும் தலைப்பில் தோற்றுவாயாக, பரத்தையிற் பிரிதலென்பது தலைமகளை வரைக்தெய்திய பின்னர், வைகலும் பாலே நுகர்வான் இடையே புளிங்காடியையும் நுகர்ந்து அதன் இனிமையறிந்தாற் போல, அவள் நுகர்ச்சியினிம்ை அறிதற்குப் புறப்பெண்டிர்மாட்டுப் பிரியாகிற்றல் அல்லது உம், பண்ணும் பாடலும் முதலாயின. காட்டிப் புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தால் தான் எல்லார்க்குக் தலைவனாகலின் அவர்க்கும் இன்பஞ் செய்யப் பிரியாகிற்றல் என்றுமாம். அல்லது உம், தலைமகளை ஊடல் அறிவித்தற்குப் பிரிதல் என்றுமாம். இவ்வாறொழிந்து தனக்கின்பம் வேண்டிப் பிரிவானாயின், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணேவுள (குறள்-1131) என்பதனால் இவளுக்குத் தலைமகள் என்னும் பெயரோடு மாறுபட்டுத் தனது பெருமையொடும் மாறுபடா நிற்கும்' என்று கூறுவதைக் காண்க. இவ்விடத்தில் இறையனார் களவியலுமையாசிரியர் இப்பிரிவு பற்றிக் கூறும் கருத்துகளும் ஒப்பு:கோக்கி உணர்தற்பாலவை." இவ்வாறு பேராசிரியரும் களவியலுரையாசிரியரும் பிற உரை யாசிரியர்களும் செய்யுள் வழக்கில் இப்பிரிவைக் குற்றமற்றதாகக் கொண்டாலும்,உலக வழக்கில் இவ்வொழுக்கம் நிகழ்ந்து வந்தமை யின் வள்ளுவர்போன்ற அறநிலையில் கிற்கும் சான்றோர்கள் இதனைத் தம் நூல்களில் இழித்துக் கூறியுள்ளதைத் தமிழ் மக்கள் எண்ணி உணர்வார்களாக. தமிழ் நெறி உயர்ந்த செறியென்பதைத் தம் உள்ளத்தில் கிலை கிறுத்துவார்களாக. ۶ بیتی عتی تیمی معتبعیت مسیحیح 5. இறை-நூற்பா 46-இன் உரை.