பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை யாகிய கிலனும், வேனிற்காலத்து வெப்பம் உழந்து மரனும் புதலும் கொடியும் கவினழிந்து கிடந்தன. புயல்கள் முழங்கக் கவின்பெறும் ஆதலின், அதற்கு அது சிறந்ததாம். மாலைப்பொழுது இங்கிலத் திற்கு இன்றியமையாத முல்லை மலரும் காலமாதலானும், இக் நிலத்துக் கருப்பொருளாகிய ஆனிரை வருங்காலமாதலானும், ஆண்டுத் தனியிருப்பாக்கு இவை கண்டுழி வருத்தம் மிகுதலின், அதுவும் சிறந்தது ஆயிற்று. குறிஞ்சிக்குப் பெரும்பான்மையும் களவிற்புணரச்சி பொருளாதலின், அப்புணர்ச்சிக்குத் தனியிடம் வேண்டுமன்றே, அது கூதிர் காலத்துப் பகலும் இரவும் நுண்துளி சிதறி இயங்குவார் இலராம் ஆகலான், ஆண்டுத் தனிப்படல் எளிதாகலின் அதற்கு அது சிறந்தது. கடுநாள் யாமமும் அவ்வாறா கலின் அதுவும் சிறந்தது. மருதத்திற்கு நிலன் பழனஞ்சார்ந்த இடமாதலான், ஆண்டு உறைவார் மேன்மக்களாதலின், அவர் பரத்தையிற்பிரிவுழி அம்மனையகத்து உறைந்தமை பிறர் அறி யாமை மறைத்தல் வேண்டி வைகறைக்கண் தம் மனையகத்துப் பெயரும் வழி, ஆண்டு மனைவி ஊடலுற்றுச் சார்கிலளாமாதலால், அவை (வைகறையும் விடியலும்) அங்கிலத்திற்குச் சிறந்தன. கெப் தற்குப் பெரும்பான்மையும் இரக்கம் பொருளாதலின், தனிமை யுற்று இரங்குவார்க்குப் பகற்பொழுதினும் இராப்பொழுது மிகுமாதலின், அப்பொழுது வருதற்கேதுவாகிய எற்பாடு கண்டார் இனி வருவது மாலையென வருத்தமுறுதலின், அதற்கு அது சிறந்தது என்க. பாலைப்பொருளாவது பிரிவு: அப்பிரிவின்கண் தலைமகற்கு வருத்தமுறுமென்று தலைமகள் கவலுங்கால் கிழிலும் ருேம் இல்லாத வழி ஏகினார் எனவும் கவலுமாகலின், அதற்கு அது சிறந்தது என்க', இவ்வாறே கச்சினார்க்கினியரும் ஏற்புடைய காரணங் கூறிச் செல்லலை அப்பொழுதுகளின் உரிமை கூறும் நூற்பாவுரைகளால் அறிந்துகொள்ளலாம். கருப்பொருள் முதற்பொருளிலிருந்து தோன்றுவது கருப் பொருள். அஃது இடத்திலும் காலத்திலும் தோன்றும்; தேவர் மக்கள் விலங்கு முதலாயினவற்றையும், உணவு செயல் முதலாயின வற்றையும், பறை யாழ் முதலியனவற்றையும், இவை போன்றன பிறவற்றையும் கருப்பொருளாகக் கொள்வர். இதனைத் தொல் காப்பியர், தெய்வம், உணாவே, மாமரம் புள்பறை, செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப.9 என்று கூறுவர். 8. அகத்தினை - நூற்பா 12 - இன் இளம்பூரணர் உரை. 9. ை நூற்பா 20.