பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

தொல்காப்பியம்-நன்னூல்


ரகரத்தை பூர்ந்து நின்ற அகரவுயிரும் கெடுத்து ரகரவொற்றின் மேல் உகர மேற்றிமுடித்தார் நன்னூலார்.

       மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்.       (தொல்.440) 

இதுவும் அது.

       (இ-ள்) மூன்று, ஆறு என்பன நெடுமுதல் குறுகி முடிவனவாம்.
       இவ்விரண்டெண்களோடு ஏழென்னும் மெய்யீற் றெண்ணுப் பெயரையுஞ் சேர்த்து எண்ணிறையளவும் என்னுஞ் சூத்திரத்து தன். 188) “மூன்றாறேழ் முதல் குறுகும்” என்றார் நன்னூலார்.
       மூன்ற னொற்றே பகார மாகும்.          (தொல்.441) 

இதுவும் அது.

   (இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கண் நின்ற னகர வொற்றுப் பகர வொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
   (உ-ம்) மூன்று+பத்து = முப்பஃது எனவரும்.
       நான்க னொற்றே றகார மாகும்.         (தொல்.442) 

இதுவும் அது.

     (இ-ள்) நான்கு என்னும் எண்ணின்கண் நின்ற னகர வொற்று றகர வொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
   (உ-ம் நான்கு + பத்து = நாற்பஃது எனவரும்.
       ஐந்த னொற்றே மகார மாகும்.         (தொல்.443)

இதுவும் அது. -

     ஐந்தென்னு மெண்ணின்கண் நின்ற நகரவொற்று மகர வொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
     (உ-ம் ஐந்து+பத்து = ஐம்பஃது எனவரும்.
     ஏழு என்பது குற்றிய லுகரமன்மையின் ஈண்டுக் கூறப்படவில்லை. உருபியலில் காண்க.
      எட்ட னொற்றே ணகார மாகும்.          (தொல்,444) 
     (இ-ள்) எட்டென்னு மெண்ணின்கண் நின்ற டகர வொற்று ணகர வொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
     (உ-ம்) எட்டுப்பத்து = எண்பஃது எனவரும்.