பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 239

   இது மாட்டேற்றான் எய்திய உகரத்திற்குக் கேடுகூறி முதல் நீள்க என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
   (இ-ள்) ஒரு, இரு என முடிந்து நின்ற முதலிரெண்ணின் முன் உயிர் முதன்மொழி வருமிடத்து நிலைமொழியுகரமாகிய எழுத்துக் கெடுமெனச் சொல்வர். அவ்விடத்து அவ்வெண் களின் முதலெழுத்துக்கள் நீண்டு முடியும் எறு.
   (உ-ம் ஒரகல், ஈரகல், ஒருழக்கு, ஈருழக்கு என வரும்.
       மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் 
       தோன்றிய வகரத் தியற்கை யாகும்.      (தொல்,456)

இதுவும் அது.

   (இ-ள்) மூன்று, நான்கு, ஐந்து, என்னுமெண்களின் முன்னர்த் தோன்றி நின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகரவொற்றாயும் நான்கின்கண் லகர வொற்றாயும், ஐந்தின்கண் ஒற்றுக் கெட்டும் முடியும் என்பதாம். 
  (உ-ம்) முவ்வகல், முல்வழக்கு, நாலகல், நாலுழக்கு, ஐயகல், ஐயுழக்கு எனவரும்.
   மூன்று என்பது முதல் நீண்டவிடத்து நிலைமொழி னகர வொற்றுக் கெடுதல் “தோன்றிய” என்ற மிகையாற் கொள்ளப் படும்.
       மூன்றன் முதனிலை நீடலு முரித்தே 
       உழக்கென் கிளவி வழக்கத் தான.       (தொல்.457) 

இஃது எய்தியது விலக்கிற்று.

  (இ-ள்) உழக்கென்னுஞ் சொல் வருமொழியாய் வரும் வழக்கிடத்து நிலைமொழியாகிய மூன்றென்னும் எண்ணுப் பெயரின் முதனிலை நீண்டு முடிதலுமுரித்து எறு.
  (உ-ம்) மூவுழக்கு எனவரும். 
  
   வழக்கத்தான என்றதனால் அகல் என்பது வருமொழியாய் வருமிடத்தும் மூவகல் என இச்செய்கை பெறுதல் கொள்க. மூன்று+உழக்கு = மூழக்கு, மூன்று ஆழாக்கு = மூழாக்கு என்னும் மரூஉ முடிபு இவ்வியலின் புறனடையாற் கொள்ளப்படும்.
     ஆறென் கிளவி முதல்நீ டும்மே.          (தொல்,458)

இதுவும் அது.