பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 (உ-ம்) முருகன், முருகனே, முருகைெடு, முருகற்கு, முருகனின், முருகனது, முருகன் கண், முருகா எனவரும். இச்சூத்திரத்தை அடியொற்றியமைந்தது, 291 பெயரே ஐஆல் குஇன் அதுகண் விளியென் ருகும் அவற்றின் பெயர்முறை. என வரும் நன்னூற் சூத்திரமாகும். எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நிகழாது. ஆதலின் அதனைச் செய்து முடிக்கும் வினைமுதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்ற பெயர் எழுவாய்வேற்றுமை யென முதற்கண் வைக்கப்பட்டது. வினே முதல் ஒருதொழிலேச் செய்யுங்கால் அச்செயலால் தோன்றிய பொருள் செயப்படு பொருள் எனப்படும். (படுதல்-தோன்றுதல்.) இத்தகைய செயப்படு பொருளாகப் பெயர்ப் பொருளே வேறுபடுத்துவது ஜயுருபாதலின் அஃது இரண்டம் வேற்றுமை யெனப்பட்டது. விஜனமுதல் ஒரு காரியத்தைச் செய்து முடித் தற்கு இன்றியமை யாது வேண்டப்படுவது கருவி. இத்தகைய கருவியாகப் பெயர்ப் பொருளே வேறுபடுத்துவது ஒடு உருபு ஆதலின் அது மூன்ரும் வேற்றுமையெனப் பட்டது. ஒருவர் ஒரு காரியத்தைக் கருவி யாற் செய்வது தமக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக் கொள் வ தாகப் பெயர்ப் பொருளே வேறுபடுத்துவது குவ்வுரு பாதலின் அது நான்காம் வேற்றுமை எனப்பட்டது. ஒருவர் ஒரு பொருளைப் பிறர் ட்குக் கொடுக்குங்கால் அப்பொருள் அவரை விட்டு நீங்குதலேக் காண்கிருேம். இவ்வாறு நீங்கநிற்கும் பொருளாகப் பெயர்ப் பொருளே வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையாயிற்று. ஒருவரிடத்து நீங்கிய பொருளே ஏற்றுக் கொண்டவன் அப்பொருளேத் தன் னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டுதல் இயல்பு. இதனம் உரிமை பாராட்டுதற்குரிய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளே வேறுபடுத்துவது அது வுருபாதலின் அஃது ஆரும் வேற்றுமையாயிற்று. மேற்குறித்த எல்லா நிகழ்ச்சிக்கும்