பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைப் பல்கலைக்கழகத் துணிவேந்தர் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனர் அவர்கள் தமக்குள்ள பல்வேறு அலுவல் களுக்கிடையே எனது வேண்டுகோளையும் அன்புடன் ஏற்று இந் நூலுக்கு அழகிய தோர் அணிந்துரை அளித்தார்கள். தமிழ் நலம் வளர்க்கும் இப்பெருந்தகையார்க்கு எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒன்றும் போதாச் சிறியேன இத்தகைய செந்தமிழ்ப்பணிக்கு உரியவனக்கிய வள்ளல் அண்ணுமலேயரசரது பேரன்பின் திறத்தை எழுமையும் நிணந்து போற்றுங் கடமையுடையேன் இப்பணியினை இனிது நிறைவேற்றியருளிய எனது வாழ் முதலாகிய முருகப்பெருமான் திருவடிகளை இறைஞ்சிப் போற்று கின்றேன். இந்நூலினை அழகிய முறையில் ஆர்வமுடன் அச்சிட்டுதவிய அண்ணுமலைநகர் சிவகாமி அச்சகத்தார்க்கு எனது பாராட்டும் நன்றியும் என்றும் உரியவாகும். தமிழ் மாணவருலகம் இந்நூலின விரும்பியேற்றுப் பயன் கொள்ளும் என நம்புகிறேன். சிதம்பரம் 142, கனகசபை நகர் శ్రీ N. * ~ 登 12.9.7 ? வெள்ளே வாரணன்