பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 ள அக ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. இஃது, ஆண்மை சுட்டிய பெயர் இருதிணைக்கண்ணும் தனக் குரிய பால் உணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆண்மை சுட்டிவரும் நான்குபெயரும் அஃறிணை ஆணுகிய ஒன்றற்கும் உயர்தினை ஒருவனுக்கும் ஒத்த நிலை மைய எ-று , (உ-ம்.) சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவும், முடவன் வந்தது, முடவன் வந்தான் எனவும், முடக் கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான் எனவும், தந்தை வந்தது, தந்தை வந்தான் எனவும் முறையே இயற்பெயர், சினேப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய நான்கும் அஃறிணை ஆைெருமைக்கும் உயர்திணையாண்மைக்கும் உரியவாய் வந்தமை காண்க. ளஅஉ. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவர் என்னும் என்றிப் பாற்கும் ஒரன் ன வ்வே. இது, பன்மை சுட்டிய பெயர் இரு திணக்கண்ணும் பாலுணர்த் துமாறு கூறுகின்றது. (இ-ள்) பன்மை சுட்டிவரும் இயற்பெயர், சினப்பெயர், சினே முதற்பெயர்என்னும் மூன்றுபெயரும் அஃறிணை யொரு மையும் அத்திணைப் பன்மையும் உயர்தினை ஆண் பெண் என்னும் ஒருமையும் ஆகிய இப்பால்களுக்கும் ஒத்த நிலை மைய. எ-று. ஒன்று என்றது, அஃறிணை ஆணுெருமை, பெண்ைெரு மையின. ஒருவர் என்றது உயர்திணை ஆைெருமை, பெண் ணுெருமையினே .