பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உரியியல் உரிச்சொற்களின் இலக்கணம் உணர்த்தினமையால் இஃது உரியியலென்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு ன்ன்னும் பொருளேயுடையவாகிப் பெயர் வினேகாேப் போன்றும் அவற்றிற்கு முதனிலேயாகியும் வருவன உரிச்சொற்களாம். இசை என்பது செவியால் உணரப்படுவது. குறிப்பு என்பது மனத்தாற் குறித்துணரப்படுவது. பண்பு என்பது ஐம்பொறி களால் உணரப்படும் குணமாகும். தத்தமக்கியல்பில்லா இடைச் சொற்போலாது இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயிற்றென்றும், பெரும் பான்மையும் செய்யுட் குரியவாய் வருதலின் உரிச்சொல்லா யிற்றென்பாரு முளரென்றும் கூறுவர் சேவைரையர். ஈறுபற்றிப் பலபொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ் சார்ந்து பொருட் குணத்தை விளக்கலின் உரிச் சொல் பெயரின் வேறு என்பர் நச்சிளுர்க்கினியர். ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது உரிச்சொல்லென்றும், ஒருசொல். பல பொருட்குரிமை தோன்றினும், பலசொல் ஒருபொருட்குரிமை தோன்றினும்’ என ஆசிரியர் கூறுதலால் இவ்வியல்பு புலனு மென்றும், எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச்சொற்கிளவி என்று ஓதினமையால் வட நூலாசிரியர் தாது. எனக் குறியிட்ட சொற்களே உரிச்சொற்களாமென்றும், தொழிற் பொருண்மை யுணர்த்துஞ் சொற்கள் யாவும் உரிச்சொல்லாயினும் வழக்கின் கட் பயிற்சியில்லாத சொற்கள் ஈண்டு எடுத்தோதப்படுகின்றன வென்றும், தொழிலாவது வினையுங் குறிப்புமாதலின் அவ்விரு வகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன. இவ்வியலிற் கூறப்படுகின்றன வென்றும், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச் சொல் சொல்லானும் குறிப்பானும் குணத்தானும் பொருள் வேறுபடுமென்றும், அவை பெயர் வினைகளைச் சார்ந்தும் அவற். றிற்கு அங்கமாகியும் வருமென்றும் கூறுவர் தெய்வச்சிலேயார்.