67 இஃது ஒரு பொருண்மேல் இரு பெயர் வருங்கால் வருவதொரு மரபு வழா நிலே யுணர்த்துகின்றது. (இ-ள்) இயற்பெயருஞ் சுட்டுப்பெயரும் ஒன்றனே ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிது வினேகோடற்கு ஒருங்கு நிகழுங் காலந் தோன்றுமாயின் (உலகத்தார்) சுட்டுப் பெயரை முற்படக் கூருர் (சுட்டுப் பெயராகிய அச்சொற்கள்) இயற்பெயர்க்குப் பின்கைக் கூறற்பாலன என்று சொல்லுவர் புலவர். எ-று. இயற்பெயராவன கொற்றன் யானை என்ருங்கு இருதினேக் கண்ணும் அவ்வப் பொருளேக்குறித்து இயல்பாய் வழங்கும் பெயர்கள் . இயற்பெயரெனவே இருதிணைக்கண்ணும் இயன்று வரும் பெயரெல்லாம் அடங்கும். சுட்டுப் பெயராவன அவன், அவள், அவர், அது, அவை, இவன், இவள், இவர், இது, இவை என்ருங்கு இருதிணே ஐம்பாற் பொருள்களேயும் சுட்டி வரும் சுட்டுப் பெயர்கள். வினேயென்றது முடிக்குஞ்சொல்லே . வினைக்கு ஒருங்கு இயலுதலாவது, இயற்பெயரும் சுட்டுப் பெயரும் ஒரு பொருளேயே குறித்த நிலையில் தனித்தனியாகவும் சேர்ந்தும் உருபேற்றும் வினைமுடியினைப் பெற்றுவருதல். வழிய-பின்னிடத் தன. வழி-பின் . இயற்பெயரும் சுட்டுப்பெயருமாகிய அவ்விரு பெயரும் ஒருங்கு வினே முடிபினேப் பெற்றுவருங்காலந் தோன்றின் இயற்பெயரை முற்கூறிச் சுட்டுப்பெயரை அவ் வியற்பெயரின் பின்னர்க் கூறுக என்பது இந்நூற்ப வில்ை அறிவுறுத்தப்பெறும் விதியாகும். (உ-ம்) சாத்தன் அவன் வந்தான்; சாத்தன் வந்தான் அவன் போயினுன் எனவும், சாத்திவந்தாள் அவட்குப் பூக் கொடுக்க எனவு வரும். இவ்வாறன்றி அவன் வந்தான் சாத்தன் போயினுன் எனச் சுட்டுப் பயரை இயற்பெயர்க்கு முற்கூறின், அவன் என்னுஞ் சுட்டு சாத்தனேச் சுட்டாது சாத்தனல்லாத மற்ருெருவனேச் சுட்டியதாய் இயற்பெயரும் சுட்டுப் பெயரும் ஒரு பொருளேக் குறித்தன அல்லவாய் வேறு படும் என்க: ஒரு பொருளேக் குறித்த இயற்பெயரும் சுட்டுப் பெயரும் பிறிது வினே கோடற்கண் இயற்பெயர் முன்கை, அதன் பின்