பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கா. கடுக

அரண்கோடலுமன்றி மைந்துபொருளாகச் சென்று துறக்கம் வேட்டுப் பொருந் தும்பைச் சிறப்புக் கூறிற்று.

மேற்காட்டுந் துறைகளெல்லாம் இச் சூத்திரத்துக் கூறிய இரண்டற்கு மன்றி மைந்து பொருளாயதற்கேயா மென்றுணர்க.

உதாரணம்:

"நெடுவேல் பாய்ந்த மார்பின்

மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே’’ (புறம்-உசு எ)

'எய்போற் கிடந்தானென் னேறு'

(புறப்பொருள்-வெ-கஎசு) என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன.

கிடந்தானென்புழி நிலந்தீண்டாவகையின் நின்ற யாக்கை யாயிற்று.

'வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச் சான்றுரைப்ப போன்றன. தங்குறை-மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர் விடாப் பாய்ந்தன மேன்மேற் பல'

(பெரும்பொருள் விளக்கம்-புறத்திரட்டு-அமர்)

இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை. "பருதிவேன் மன்னர் பலர் காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய-வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணதே மண்ணதே யென்று.' இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாம் இருநிலந் தீண்டா

QI ప}&5,

இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற் றிணையெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் றுறையெனவும் படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறிய தாமென் றுணர்க. - (கசு)

சென்ற உயிர்-சிறிதொழியத் தேய்ந்த நிலையில் உடலைப் பற்றி நிற்கும் உயிர். நின்றயாக்கை- துளக்கமின்றி நிலை நின்ற உடம்பு. சென்றவுயிரின் நின்ற யாக்கை, இரு நிலந்தீண்டா அருநிலை வகை என்னும் இச்சிறப்பியல்பு, தும்பைத்திணைக்கெல்லாம் பொதுவன்மையின் திணையெனவும் படாது; தும்பைத்திணைக்கே சிறு பிலக்கணமாதலின், துறையெனவும் படாது, துறைப் பொருள் நிகழ்ந்து முடிந்தபின் அதன் சிறப்பினைக் கண்டோர் கூறியதாகவே கொள்ளப்படும் என்பது கருத்து,