பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு கஅ 1ே

தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபல நனந்தலை பெயரக்

)

கூறினை பெருமநின படிமை யானே’’ (பதிற்று. எச

எனவும் வருவனவற்றுள் ஒதியவாறும் வேட்டவாறுங் காண்க.

'ஒருமழுவாள் வேந்த னொருமூ வெழுகா லாசடு வென்றி யளவோ-வுரைசான்ற வீட்டமாம் பல்பெருந்து ணெங்கும் பசுப்படுத்து வேட்டநாள் பெற்ற மிகை."

இதுவும் வேட்டல்.

'விசையந் தப்பிய' என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.

'ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்' (குறள்-கொடுங். க)

இது காவல் கூறிற்று.

கடுங்கண்ண கொல்களிற்றான என்னும் (கச) புறப் பாட்டுப் படைக்கலங் கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க.

"தொறுத்தவய லாசல் பிறழ்நவு' பாடல் சான்ற பயங்கெழு வைப்பி னாடுகவி னழிய நாமத் தோற்றிக்

கூற்றடுஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் மழை வேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே.’’ (பதிற்று-கங்)

இதனுண் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும் அறத்திற் றிரிந்த வேந்தனை யழித்து அவன் நாட்டைக் குடி யோம்பிக் காத்தவாறுங் கூறிற்று.

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.' (குறள் செங்-கC)

இது தண்டம்.