பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு & శ్రీ ఊ

'உற்றுழி புதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ சன்ன வுடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியு மொருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவரு ளறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே.' (புறம்-க அங்) இது வேளாளர் ஓதலின் சிறப்புக் கூறியது.

'ஈத்துவக்கு மின் ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.' (குறள்-ஈகை-அ) இஃது இருவர்க்கும் ஈதற்சிறப்புக் கூறிற்று.

“போர்வாகை வாய்ந்த புரவலரின் மேதக்கா சேர்வாழ்ந சென் பதற் கேதுவாஞ்-சீர்கா லுசைகாக்கு மன்னர்க் கொளிபெருகத் தாந்த நிரைகாத்துத் தந்த நிதி.' இது வேளாளர் நிரைகாத்தது.

“உழுதுண்டு வாழ்வாசே வாழ்வார்மற் றெல்லாத் தொழுதுண்டு பின் செல் பவர்.' (குறள்-உழவு-உ} இஃது உழவுத்தொழிற் சிறப்பு இருவர்க்குங் கூறியது.

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின் .' (குறள்-நடுவு-க0) இது வாணிகச்சிறப்பு இருவர்க்குங் கூறியது.

'இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை. விடுப்ப வொழிதலோ டின்ன-குடிப்பிறந்தார் குன்றாவொழுக்கமாக் கொண்டார் கயவளோ டொன் றா வுணரற்பாற் றன்று.' (நாலடி-குடி-) இது வழிபாடு கூறியது;" ஏனைய வந்துழிக் காண்க.

(பாடம்) ஈதல் கூறிற்று: 2. வேளாளர்க்கு ஏனைய மூவகை வருணத்தாரையும் வழிபடுதல் தொழில் என்பதற்கு எடுத்துக்காட்டிய இருக்கையெழலும் எனத் தொடங்கும் நாலடியார் பாடல், வேளாண் மாந்தர்க்கு மட்டுமின்றி நற் குடிப் பிறந்த பெரியோர் அனை வருக்கும் உரிய ஒழுக்க நெறியினை விதி பதாக லின், அதனை வேளாளர்க்குரிய

தொழில்வகையினைச் சுட்டுவதாகக் காட்டுதல் சிறிதும் பொருந்தாது.

தேயம்’ என்னு சொல் பக்கம்’ என்ற பொருளில் ஆளப்பெற்றது.