பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. & 2- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

உதாரணம் 'ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு' (குறள். டுச) எனவும,

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தா சார்தரு நோய்' (குறள் கூடுக)

எனவும் வரும்.

இன்னும் பொருளொடு புணர்ந்த பக்கமும் என்றது, அறம் பொருள் இன்பம் மூன்றினும் அறனும் இன்பமும் அன்றி ஒழிந்த பொருளொடு பொருந்திய பக்கமும் என்றுமாம். பொருளாவது நாடும் அரணும் பொருளும் அமைச்சும் நட்பும் படையும்.

'படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு' (குறள். க. அக.) என்பதனானும் கொள்க அவையிற்றின் மிகுதி கூறலும் வாகை யாம். நாடாவது,

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு,’’ (குறள், எங்க)

அரணாவது,

'கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீசது அசண்.' (குறள், எசடு) பொருளாவது,

'உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள். எடுசு) அமைச்சாவது,

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.' (குறள். சுங் உ) நட்பாவது,

'அழிவின் அவை நீக்கி ஆறுய்த் தழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.’’ (குறள். ಛ9, ೧?

படையாவது,

'அழிவின்று அறையோகா தாகி வழிவந்த வன்கண் அதுவே ப ைட.' (குறள். எசுச)