பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு அ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

வருமன்றே. அதுபோல இதுவும் ஒருபாற்கு உரித்தன்றி ஒருவனை ஒருவன் யாதானும் ஒரு பயன் கருதியவழி மொழிந்து நிற்பது ஆக ல்ானும் கைக்கிளையாகிய காமப்பகுதிக்கண் மெய்ப்பெயர்பற்றிக் கூறுதலானும், கைக்கிளை போலச் செந்திறத்தாற் கூறுதலானும், அதற்கு இது புறனாயிற்று' நோந்திறமாவது கழிபேரிரக்கம்; செந் திறமாவன அஃது அல்லாதன." (2-0) நச் :

இ. ()

இது மேற் புறத்திணை யிலக்கணத் திறப்படக் கிளப்பின் (தொல்-புறத்திணை-க) என்புழிக் கிடக்கைமுறை கூறிய முறை யான் இறுதி நின்ற பாடாண்டினைக்குப் பொது விலக்கணம் உணர்த்துவான் அதற்குப் பெயர் இன்ன தெனவும், அது கைக் கிளைப்புறனாமெனவும், அஃது இத்துணைப் பொருளுடைத்தென வுங் கூறுகின்றது.

(இ.கள்.) பாடாண்பகுதி கைக்கிளைப்புறனே-பாடானெனப் பட்ட புறத்திணையது கூறு கைக்கிளையென்று கூறப்பட்ட அகத் திணைக்குப் புறனாம்; நாடுங்காலை நாலிரண்டு உடைத்துதன்னை நாடிச் சொல்லுவார் செய்யுளுண் முடிந்த பொருள் பாடானாகவே நிறுப்ப நாடுங்காலத்து எண்வகைப் பொரு ளுடைத்து என்றவாறு.

பாடாணென்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண் மகனையும் நோக்காது, அவனதொழுகலாறாகிய திணை யுணர்த் தினமையின் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட, ஒரு லபுவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின் அவை தம்மின் வேறாகிய ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோ டொத்தலிற் பாடாண்டிணை கைக்கிளைப் புறனாயிற்று." வெட்சி முதலிய

1. ஒருநிலத்திக்கு உரித்தன்றி ஒருதலைக்காமமாய் வரும் கைக்கிளை போன்று ஒருபாலுக்கு உரித்தன்றி ஒருவரையொருவர் யாதாதும் ஒருபயன் பெறுதல் கருதியவழிப் பாடப் பெறுவது பாடாண்தினையாதலானும், கைக்கிளை யாகிய காமப்பகுதிக்கண், இயற்பெயர் கூறப்படுதல் போன்று பாடாண் திணை யின் கிண்னும் இயற்பெயர் கூறப்படுதலானும், கைக்கிளைபோன்று இட்பாடாண் தினையும் செந்திறமாகிய இன்பியல்பற்றி வருதலானும் கைக்கிளை என்னும் ஆகத்தினைக்குப் பாடாண் புறனாயிற்று எனக் காரணம் கூறுவர் இளம்பூரணர்.

2. கோந்திறம் என்பது, கரிபேரிறக்கமாகிய துன்பியல், செந்திறம் என்பது மகிழ்ச்சிப்பொருட்டாகிய இன்பியல்.

(பாடம்) 3 பாடுதலும்’

4. பாட்டுடைத் தலைவர், தம்மைப் பரவுதலும் புகழ்ச்சியும் விரும்ப, அவர் களைப் பாடும் புலவர், பரிசில் முதலியன விரும்ப, இவ்வாறு இரு திறத்தாரும் 令ó நிலைக் காமமாகிய கைக்கிளைத்திணை பேசில் ஒரும்ருங்கு பற்றிய விருப்பமுடைய் யிருத்துகின் ராடாண் , னை கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனா தேது என்பதாயக