பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உ.உ 3_守T命

இது வள்ளி. வள்ளி என்பது ஈண்டு வெறியாட்டு. கொடிநிலை வந்த வழிக் காண்க. இனி அவை சார்ந்து வருமாறு முன்னர்க் காட்டுதும்.

இனிக் காமப்பகுதி வருமாறு:

'மலைபடு சாந்தம் மலர்மார்! யாம்தின் பலர்படி செல்வம் படியேம்-புலர்விடியல் வண்டினங்கூட் டுண்ணும் வயல் சூழ் திருநகரிற் கண்டனங் காண்டற் கரிது:” (புறப். பாடாண் சன இஃது ஊடற்பொருண்மைக்கண் வந்தது. இது, இயற்பெயர் சார்த்தியும் வரும்.

  • வையைதன் நீர்முற்றி மதில் பொருஉம் பகையல்லால் தேசாதார் போர் முற்றொன்று அறியாத புரிசைசூழ் புனலுரசன்.'

(கவி. மருதம்-உ} என்பது குறிப்பினாற் பாட்டுடைத்தலைமகனே கிளவித்தலை மகனாக வந்தது.

'பூந்தண்டார்ப் புலர்சாந்தில் தென்னவன் உயர் கூடல் தேம்பாய அவிழ்நீலத் தலர்வென்ற அமருண்கண் ஏந்துகோட் டெழில்யானை ஒன்னாதார்க் கவன்வேலில் சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின் மொழி.”

(கவி. குறிஞ்சி-உக)

இது காமத்தின்கண் வந்தது. (a.a.) நச்சர்:

!පූ_පූ_

இது மேல் ஒன்றன்பகுதி (தொல்-புறத்திணை-உசு) என் புழித் தோற்றுவாயாகச் செய்த இருபகுதியுண் மக்கட் பகுதி கூறுகின்றது.

(இ-ள்) பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்-ஒரு தலைவன் தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந்துரைத்தலும் கருதிய பக்கத்தின்கண்ணும்; வகைபட முன்னோர் கூறிய குறிப்பி னும்-அறம்பொருளின்பங்களின் கூறுபாடு தோன்ற முன் னுள்ளோர் கூறிய குறிப்புப்பொருளின் கண்ணும்; செந்துறை நிலைஇ செவ்வன கூறுந்துறை நிலைபெற்று: வழங்கு இயல் மருங்கின்-வழங்குதல் இயலுமிடத்து; ஆங்கு வண்ணப்பகுதி

(பா.ம்) 1 குறிப்பினது பொருள்: