பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உசு 席。む。

உதாரணம் :- 'அரியெய் சிலம்பின்’ என்னும் (சு) அகப் பாட்டினுள் தித்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லினென நாடும், உறந்தையென ஊருங், காவிரி யாடினை யென யாறுங் கூறிப், பின்னர் அகப்பொருள் நிகழ்ந்த வாறுங் கொள்க.

'மருங்கு என்றதனாற் பாட்டுடைத்தலைவன் பெயர்கூறிப் பின்னர் நாடு முதலியன கூறன் மரபென்று கொள்க. அதுவும் அச் செய்யுளாற் பெற்றாம்.

'நிலம்பூத்த மாமிசை மிர்பாலுங் குயிலெள்ள நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப் புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலு முள்ளார்.கொல்.:

(கலி-உ எ) இதனுட் கூடவிடத்துத் தலைவி யென்பது கூறினார். "கன்மிசை மயிலாலக் கறங்கியூ சலர்துற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தஉே முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின் மேல்விளையாட்டும்

விரும்பார்கொல்..' (கலி-உ எ) இதனுள் வென்வேலான் குன்றென மலை கூறினார்.

திசைதிசை தேனார்க்குத் திருமருத முன்றுறை வசைதிர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தானைத் தாங்கித்த மிசை பரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்.'

(கலி-உகூ) இதனுள் ஆறு கூறினார். 'புனவளர் பூங்கொடி' என்னும் (உ.எ) மருதக்கலியும் அது. 'கரிய மலர் நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக்

காட்டி யரிய சூள் பொய்த்தா சறனிலரென் றேழையம்யாங்

கறிகோ மைய விரிகதிர் வெண்மதியு மீன்கணமு மாமென்றே விளங்கும்

வெள்ளைப் புரிவளையு முத்துங்கண்டாம்பல் பொதியவிழ்க்கும்

புகாதே யெம்மூர்.’’ (சிலப். கானல்-எ)

1. இச் செய்யுளை உகஆம் பக்கத்திற் காண்க.