பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ہوئے ۔ ATe

தொல்காப்பியம் பொருளதிகாரம்

யாவருந் தண்குரல் கேட்ப நிரை வெண்பல் மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே பூவுயிர்த் தன்ன புகழ்சால் எழிலுண்கண் ஆயிதழ் மல்க வழும் , ஒ ஓ, அழிதகப் பாராதே அல்லல் குறுகினம் காண்பாங் கணங்குழை பண்பு ; என்று, எல்லீரு மென் செய்தீர் என்னை நகுதிரோ நல்ல நகா அலிர் மற்கொலோ யானுற்ற வல்ல லு lஇயான் மாய மலர் மார்பு புல்லிப் புணரப் பெறின் ; எல்லாநீ, உற்ற தெவனோமற் றென்றீரேல் எற்சிதை செய்தான் இவனென வுற்ற திதுவென வெய்த வுரைக்கு முரனகத் துண்டாயின் பை தல வாகிப் பசக்குவ மன்னே வென் நெய் தன் மலரன்ன கண் ; கோடு வாய் கூடாப் பிறை யைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்; தெள்ளியேம் என்றுரைத்துத் தேராது ஒருநிலையே வள்ளியை யாகென நெஞ்சை வலியுறீஇ உள்ளி வருகுவர் கொல்லோ உளைந்தியான் எள்ளி யிருக்குவென் மற்கொலோ நல்லிருண் மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால் தோன்றின னாகத் தொடுத்தேன்மன் யான் தன்னைப் பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து; கதிர் பகா ஞாயிறே கல்சேர்தி யாயின் அவரை நினனத்து நிறுத்தென் கை நீட்டித் தருகுவை யாயின் தவிருமென் நெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ; மையில் சுடரே மலைசேர்தி நீயாயின் பெளவ நீர்த் தோன் றிப் பகல் செய்யு மாத்திரை கைவிளக் காகக் கதிர் சில தாராயென் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு :