T Pఙ. தொல்காப்பியம் - பொருளதிகாரம்
என்பது உயர்த்துச் சொல்லியவாறு. (சடு)
இதுவுந் தோழிக்குரியதோர் வேறுபாடு கூறுகின்றது.
(இ-ள்.) அவட்கு தோழிக்கு; உயர்மொழிக் கிளவியும் உரிய-தலைவியையுந் தலைவனையும் உயர்த்துக் கூறுங் கூற்றும் உரியவாம் ஒரோவோரிடத்து (எ - று.)
'மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாண ரூரநின் மாணிழை அரிவை காவிரி மலர்நிறை யன்ன நின் மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.' (ஐங்குறு.42)
இதனுட் காவிரிப் பெருக்குப்போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறென்னையெனத் தலை வியை உயர்த்துக் கூறியவாறு காண்க. .
'காலையெழுந்து’’ (குறுந் 45) என்பதும் அது.
'உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்'
(கலி,47)
எனவுந்,
" தாமரைக் கண்ணியை.........' (கலி. 52)
எனவுந் தலைவனை உயர்த்துக் கூறியவாறு காண்க. (சக}
ஆய்வுரை :
இதுவும் தோழிக்குரியதோர் திறம் உணர்த்துகின்றது.
1. தன்னிற் பெரியாரை அவர் முன் னின்று உயர்த்துக் கூறுதல் முகமன் மொழி.
பாவதன்றி மரபென்றாயினும் தோழி தலைவன் முன் கின்று இங்கனம் உயர்த்துக் கூறுதல் தலைவன் இத் களவொழுக்கினை விடுத்துத் தலைவியை மணந்து கொள்ளு. தல் வேண்டும் என்னுங்கருத்துடன் உயர்த்துக் கூறியதாகலின் மரபு வழுவமைதியாக அமைத்துக் கொள்ளப் பெறும்,
2. அவட்கு என் புழி அவள் என்னுஞ் சுட்டு முற்சூத்திரத்திற் குறித்த தோழியைச்
• التي لها و نة 5