பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல் தொலகாப்பியம் - பொருளதிகாரம்

ா கனவும் உரித்தால் அவ்விடத்தான."

இளம் பூரணம் :

என்-எனின். இதுவுங் காமம் இடையீடுபட்டுழி வருவ தோர் பொருள் வேறுபாடு உணர்த்திற்று

(இ-ன் மேற்கூறியவாற்றால் காமம் இடையீடுபட்டுழிக் கனாக் காண்டலும் உரித்தென்றவாறு

இது தலைமகற்குத் தலைமகட்கும் உரித்து.

"இன்னகை இணைய மாகவும் எம்வயின் ஊடல் யாங்கு வந் தன்றென பாழ நின் கோடேத்து புருவமொடு குவவு துதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்ன ர மையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற வலமரல் போற்றா யாகவிற் புலத்தியால் எம்மே” (அகம் க.க)

என்றது தலைவன் கனாக் கண்டு கூறியது.

'கேட்டிசின் வாழி தோழி அல் ற் பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇ வாய்த் தரு பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவத் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த்

தமியேன் மன்ற அளியன் யானே ' (குறுந்.க. 0ர் இது, தலைவி கணாக் கண்டு கூறியது. (க.)

நச்சினார்க்கினியம் :

இது, மேற்கூறிய நிலைமைகள் கனவின் கண்ணும் நிகழு. மெனப் பகுதிக்கிளவி கூறுகின்றது.

(இ - ள்.) அவ்விடத்தான - முன்னர் வழுவமைத்த நிலைமை பின் கண்னே வந்தன ; கனவும் உரித்தால் கனவும் உரித்தா

1, அவ்விடததான கனவும் உரித்து என இயையும். அவ்விடத்தானஅஸ்விடத்தின் கண். ஆதுருபு ஏழாம் வேற்றுமைப்பொருளில் வந்தது. அவ்வின் என்றது. மேலைச் சூத்திரத்துட் கடறியவாறு காத்லர் இருவரும் தம்முட் கூடம் பெறாது இடையீடு பட்ட நிலைமையினை. ஆல்-அ ைச.