σώα. தொல்காப்பியம் -மெய்ப்பாட்டியல்
- தின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளியாற்றச் சிறுவரை திற'
எனவரும் அகப்பாட்டிலு மிதுகுறிக்கப்படுதல் காண்க. ஐயம்= காதல் மிகையாற் கடுத்தல் இது முதற்காட்சியினிகழும் ஐய மன்று: அது தெளிந்தபின் எழாதாதலின், ஈண்டு ஊடலில் எழுமையயுணர்வைக் குறிக்கும்.
- கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினிரென்று', 'வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள். குன்னித் தும்மினர் என்று', 'தும்முச் செறுப்பவழுதாள். துகளுள்னல் எம்மை மறைத்திரோ என்று-'; என்பன போல,
வருவன கண்டுகொள்க.
மிகை-கைம்மிகு காதலான் வரும் நிறையழிவு. இஃது இப்பொருட்டாதல் "பொழுதுதலை வைத்த கையறுகாலை இறந்த போலக் கிளக்குங் கிளவி-மடனே, வருத்தம் 'மருட்கை, மிகுதியொ டவை நாற்பொருட்கண் நிகழுமென்ப' எனப் பொருளியலில் வருதலானறிக. "மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றிவிடும்' எனவும், காமக் கணிச்சியுடைக்கு நிறை என்னும் நானுத்தாழ் வீழ்த்த கதவு" எனவும் தலைவற்கும். "பன்மாயக் கள்வன் பணிமொழி பன்றோ நம்பெண்மை யுடைக்கும் படை' எனத் தலைவிக்கும் காதல்மிகையும் அதனால் நிறையழிவும் சுட்டப்படுதலறிக. தடுக்கு-காதலர்க்கு உணர்வு மிகையானாம் பணிப்பு. ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு இவள் இடைமுலைக் கிடந்தும் நடுங் கலானிர் (குறுத். 178) எனத் தலைவனுக்கும். 'சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே.........மடந்தை! பரிந்தனென் அல்லனோ இறை இறையானே?" (குறுந், 53) எனத் தலைவிக் கும் முறையே காதல் வேகத்தானாய நடுக்கம் குறிக்கப்பட்டமை காண்க.
இவ்வாறு அகத்துறைகளுக்குச் சிறந்துரிய இவற்றையும் முன் "எட்டே மெய்ப்பாடு' ன வகுத்துப் பிரித்த எண்ணான் குணர்வு போலவே. அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பவருவன எனக் கருதுவர் பழையவுரைகாரர். நானான்காய் எட்டுவகை