பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா க 麥額、

இனி, எண்ணான்கு என்றது, ஒத்த குறியியல் கருதிக் தொகுத் தினம்புணர்க்காமல், தனித்தனி எண்ணவரும் மெய்ப் பாட்டுப் பொருளா முள்ளுணர்வுகளின் தொகையெண் தானான் கென்றது அவை முப்பத்திரண்டையும் மெய்ப்படுக யொப்புமையால் திரலே நந்தாலாக இனம்புணர்த்தெண்ணும் வகை முறை. இதன்பின் எள்ளல்முதல் விளையாட்டிறுதி தனி வகுத்து எண்ணப்பட்ட முப்பத்திரண்டும், மெய்ப்படு புறக்குறி இய லொப்பால் இனம் புணர்த்து நந்நான்காய்த் தொகுக்குங்கால்' நகை முதல் உவகை ஈறாய் அப்பாலெட்டே மெய்ப்பாடு' எனப் படுபவற்றுளடங்கும். குறியொப்பால் இனம் கூட்டித் தோகை பெற்று வருமிவை குறிமுறையால் எண்வகை யியல் நெறி பிழையாமை கருதி இவ்வாறு கூறப்பட்டன என்க.

நான்கன் முன் தான்கு ‘தானான்கா மாறு, "நான்கன் ஒற்றே ல-காரமாகும்' (467); "வ-கரம் வருவழி (452) ............ நான்கன் ஒற்றே ல-காரமாகும் (453)'; உயிர் வருகாலை (458)... ..... மூன்றும் நான்கும ஐந்தென்கிளவியும் தோன்றிய வகரத் தியற்கையாகும்' (456) எனும் தொல்காப்பியர் எழுத்ததி காவிச் சூத்திரங்களாலறிக. இன்னும், 'க-ச த ப -முதன் மொழி வரூஉங்காலை, ... ... ... மூன்றன் ஒற்றே வந்த கொக்கும்' (447) எனவும், ந-ம-வருகாலை, ஐத்தும் மூன்றும் வந்ததொக்கும் ஒற்றியல் நிலையே' (451 எனவும் தெளிக்கும் தோல்காப்பியர், நான்கன் ஒற்று மவ்வாறாகும் எனக் கூறாமை யானும், முதற் பத்தெண்களுள் 'மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்’ எனக் கூறி நான்கன் முதலுக்குக் குறுக்கம் யாண்டும் குறியாமையானும், நானாற்றிசை- (களவழி.6) - தானு று - நானிலம் - நானுல் - நாலெட்டு-நாலீரைம்பது - நாலிரண்டு

. எனவே பல்காலும் பலவிடத்தும் பண்டைச் சான்றோர் செய்யுட்களில் பயிலுதலானும், நகரம் வருங்கால் நான்கன் ஒற்று லகரமாகி முதல் குறுகாது நால் என நின்று, வரு நான் கொடு புணர்ந்து நானான்கென வருதலே தமிழ்மரபாமாறு தேறப் படும். பித்திய நன்னூலாரும் ஒன்றுமுதலெட்டீறாமெண்களுள்...... மூன்றாறேழ் குறுகும்" எனக்கூறி யமைந்தாரன்றி, நான்கன் முதலுக்குக் குறுக்கம் கூறிற்றிலர். எனவே, நானான்கென்பதே பண்டையோர் கொண்ட செய்யுட்சொல் என்பதும், நந்தான்.கென்பது (இலக்கண நூலாதரவற்ற பிற்காலப்பேச்சு