பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 தொல்காப்பியம் 'காலம் உலகம் உயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வருஉம் ஆயி ரைந்தொடு பிறவு மன்ன ஆவயின் வருஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன" எனவரும் சொல்லதிகாரச் சூத்திரம், இருதிணை, ஐம்பால்களுள் இன்ன பால் என விளங்காதன சிலவற்றை யெடுத்துரைத்து உயர்திணைப்பாற்படுத்துவதாகும். காலதத்துவமும் உலகப் பகுதி யும் உயிரும் உடம்பும் பால்வரை தெய்வமும் வினையும் பூதமும் ஞாயிறும் திங்களும் சொல்லும் ஆகிய இப்பத்துடனே இவை போன்று வருவன பிறவுமாகிய சொற்களெல்லாம் ஐம்பாலுள் இன்ன பால் என்று இசையாதனவாய் உயர்திணைப் பொருண் மேல் நிகழ்வனவாம் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். 'இச்சூத்திரத்துக் கூறியவற்றுள் உலகமும் உயிரும் உடம்பும் ஒழிந்தனவெல்லாந் தெய்வத்தையே உணர்த்தினவாதலின் தெய்வமென்பதனைத் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலக் கிளவியும் என்பதன்ை உயர்திணயென்பது பெற்ரும். இவையெல்லாந் தெய்வமென்னும் உயர்திணைப் பொருளை யுணர்த்தினவேனுந் தெய்வமென்னுஞ்சொல் அஃறிணை வாசகமாதலின் அதற்கேற்ப அஃறிணை முடியே கொள்ளுமென்ருர். இச்சொற்கள் கூறுகின்ற பொழுதே தத்தம் உயர்தினைப் பாற் பொருளே தோற்றுவித்து நிற்றலின் ஆகுபெயரன்மையுணர்க.காலமென்றது காலக்கடவுளே. உலகமென்றது உலகத்தாரை. அறஞ்செய்து துறக்கம் புக்கான், உயிர்நீத் தொருமகன் கிடந்தான் என உயிரும் உடம்பும்வரின் வேறன்றி அவராகவுணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கோடலின் மக்களேயாயின. இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுத்தலின் பால்வரை தெய்வமென்ருர், வினைஇருவினைத் தெய்வம். சொல் - நாமகளாகிய தெய்வம் என