பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லதிகாரம் "எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி என மேற்பாயிரத் துள் நிறுத்தமுறையானே எழுத்திலக்கணங் கூறிய ஆசிரியர், இப்படலத்தால் சொல்லிலக்கணங் கூறுகின்ருர், அதனுல் இது சொல்லதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. சொல்லாவது முந் கூடிய எழுத்தின்ை ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையை யும் ஒருவர் உணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஓசையாம். கிளவி, சொல், மொழி என்பன எழுத்தினுலாகிய ஓசையையே குறிப்பன. கடலொலி, சங்கொலி, இடியொலி முதலியன எழுத் தியல் தழுவா ஓசைகளாம் இவற்றை அரவம், ஓசை, இசை என்ற சொற்களால் வழங்குதல் மரபு. சொல்லென்பது எழுத் திருலாக்கப்பட்டு இருதினைப் பொருள்களையும் அறிவிக்கும் ஒசை யென்றும், தன்னையுணர நின்றவழி எழுத்தெனவும், பிறபொருளை யுணர்த்தியவழிச் சொல்லெனவும் கூறப்படுமென்றும் உரை யாசிரியர் கூறுவர். ஒருவர் பொருளை உணர்தற்கும் உணர்த்தற் கும் கருவியாய் நிற்பது சொல். தானே ஒரு பொருளைக் கருதியுணர்த்தும் உணர்வு செல்லுக்கு இல்லை. பொருளயுணர்த் துவானுெருவன் சொல்லின் துணைகொண்டன் றிப் பொருளே யறிவுறுத்தலாகாமையின் அவனது தொழிலைச் சொல்லாகிய கருவிமேலேற்றிச் சொல் உணர்த்துமெனக் கருவிக் கருத்தா வாகக் கூறுவர் தொல்காப்பியர். சொற்களைப் பாகுபடுத்து விளக்கக் கருதிய ஆசிரியர் இருதிணை, ஜம்பால், எழுவகை வழு, எட்டு வேற்றுமை, அறு வகைத் தொகை, முன்றிடம், மூன்று காலம், இருவகை வழக்கு என்னும் இவ்வெட்டு வகையான் ஆராய்ந்துணர்த்தினரென்பர் இளம்பூரணர். இவ்வெட்டிைேடு சொல் நான்குவகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள்