பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தொல்காப்பியம் நுதலியபொருள் சொல்லிடத்தில்லையெனவே, ஏனைப் பெயர்ச் சொல்லிடத்தும் வினைச்சொல்லிடத்தும் முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக் கள் பிரிந்து பொருளுணர்த்தல் உண்டென்பது பெறப்படும். பெயர் பிரிந்தன பெயரியலுள்ளும் வினை பிரிந்தன வினையியலுள் ளும் ஈறுபற்றிப் பிரித்துரைக்கப்பட்டமை காண்க. இடைச்சொல் தனித்து நின்று பொருளுணர்த்தாமையின் பிரிதலும் பிரியாமை யும் அதற்கில்லையென்பர் நச்சினர்க்கினியர். எச்சவியல் கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல் களுள் உணர்த்துதற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணமெல்லாவற்றையுந் தொகுத்துணர்த்து வது இவ்வியலாதலின் எச்சவியலென்னும் பெயர்த்தாயிற்று. பத்துவகையெச்சம் உணர்த்தலால் எச்சவியல் எனப் பெயராயிற் றென்பாருமுளர். பலபொருட்டொகுதிக்கு அத்தொகுதியைச் சேர்ந்த ஒரு பொருளைப்பற்றிப் பெயரிடுங்கால் அத்தொகுதியுள் தலைமையான பொருளைப்பற்றியோ பெரும்பான்மையாகிய பொருளைப்பற்றியோ பெயரிடுதல் மரபு. அத்தகைய தலைமை யாகிய பொருளாகவோ பெரும்பான்மையாகிய பொருளாகவோ இவ்வெச்சங்களைக் கொள்ளுதற்கில்லாமையால் அவர் கூற்றுப் பொருந்தாதென்பர் சேவைரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங் களே 66-ஆக இளம்பூரணரும், 67-ஆகச் சேனவரையரும் நச்சிளுர்க்கினியரும் பகுத்துப் பொருளுரைப்பர். இவ்வியலிலுள்ள 'இறப்பின் நிகழ்வின்'(31) எவ்வயின் வினையும், (32) "அவைதாந் தத்தங்கிளவி (33) என்னும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக் கணமாகிய இயைபு நோக்கி வினையியலிறுதியில் வைத்து உரை கூறினர் தெய்வச்சிலையார். அவருரையின்படி இவ்வியற் சூத்திரங் கள் அறுபத்தொன்ரும். இவ்வியலின்கண் 1-முதல் 15-வரையுள்ள சூத்திரங்களால் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்ருற்