பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினையியல் 105 சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகையாய்ப் புலவராற் பாடப்பெறும் தலைமக்களது ஒழுகலாருகிய பண்புடைமையினை யுணர்த்திற்றென்பது நச்சிஞர்க் கினியர் கருத்தாகும். பாடாண் திணைப்பகுதி கைக்கிளை யென்னும் அகத் திணைக்குப் புறணுகும். ஒருநிலத்திற்குரித்தன்றி ஒருதலைக் காம மாகி வருவது கைக்கிளையாகிய அகத்திணை. அதுபோல ஒருபாற் குரித்தன்றி ஒருவனையொருவன் யாதானுமோர் பயன் கருதியவழி மொழிந்து நிற்பது பாடாண். இயற்பெயர் கூறப்படுதலும் கழி பேரிரக்கமல்லாத செந்திறத்தால் வருதலும் இரண்டற்கும் ஒக்கும். தலைவன், பரவலும் புகழ்ச்சியும் வேண்டப், புலவன் பரிசில் வேண்டுதலின், ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோ டொத்த லால் பாடாண்திணை கைக்கிளைக்குப் புறணுயிற்று. குடும்ப வாழ்விலே மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக்கமும் அரசியல் வாழ்விலே மேற் கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி யென்னும் அறுவகைப் புறவொழுக்கங்களும் ஆகிய இவ் வொழுக்கங்களை யடிப்படையாகக்கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும், வெட்சி முதலிய அறுவகை யொழுகாலாறு களும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத் துணர்வுகளும் பாட்டுடைத் தலைவன்பால் நிகழ்வன. பாடாண்திணையிலோ பாடுதல் வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காரணமாகிய குணஞ் செயல்கள் பாட்டுடைத் தலைவன்பாலும் நிகழ்வனவாம். வெட்சி முதலிய ஆறும் தலைமகனுக்குரிய பண்புகளை நிலைக் களஞகக்கொண்டு தோன்றும் தனிநிலைத் திணைகள். பாடாண் திணையோ தலைமகன்பால் நிகழும் மேற்கூறியதிணை நிகழ்ச்சி களைத் தனக்கு நிலைக்களன்களாகக்கொண்டு தோற்றும் சார்பு நிலைத்திணையாம். எனவே போர்மறவர்.பால் அமைவனவாகிய