பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தொல்காப்பியம் நுத லியபொருள் என இளம்பூரணரும், உவமத்தாலும் பொருள் புலப்பாட்ே யுணர்த்துகின்ருராதலின், மேல் பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபு உடைத்தாயிற்று' எனப் பேராசிரிய ரும், இவ்வியலின் வைப்பு முறைக்கு இயைபு காட்டினர். இவ் வியலிலுள்ள சூத்திரங்களை முப்பத்தெட்டாக இளம்பூரணரும் முப் பத்தேழாகப் பேராசிரியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். மேல், அகத்திணையியலுள் உள்ளுறையுவமம், ஏனையுவமம் என உவமத்தினை இரண்டாக்கி ஒதிய ஆசிரியர், அவ்விரண்ட னுள் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பெருக வழங்கும் ஏனையுவமத்தின் இயல்பினை இவ்வியலின் முதற்கண்ணும், செய்யு ளுக்கேயுரிய உள்ளுறை யுவமத்தின் இலக்கணத்தினைச் செய்யு ளியலுடன் இயையும்படி இவ்வியலின் இறுதிக்கண்ணும் வைத்து விளக்குகின்ருர், இதன்கண் i முதல் 22 வரையுள்ள சூத்திரங் களால் ஏனையுவமத்தின் இலக்கணமும், 23 முதல் 31 வரையுள்ள சூத்திரங்களால் உள்ளுறையுவமத்தின் இலக்கணமும், 32 முதல் 37 முடியவுள்ள சூத்திரங்களால் உள்ளுறை யுவமம் போன்று மனத்தாற் கருதியுணர் தற்குரிய ஏனையுவமத்தின் வேறுபாடுகளும் பிறவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. - சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பொருள் என்றும், அதனது இயல்பினை விளக்க வேண்டி ஒப்புமையாக எடுத்துக் காட்டப்படும் பிறபொருளை உவமையென்றும் கூறுவர் தொல் காப்பியர். இவ்விரண்டினையும் முறையே உபமேயம் என்றும் உபமானம் என்றும் வழங்குவர் வடநூலார். உவமையும் பொரு ளும் ஆகிய இவ்விரு பொருளின்கண்ணும் ஒத்தமைந்த வண்ணம் வடிவு, தொழில், பயன் என்பன பற்றியமைந்த ஒப்புமைத் தன்மை பொதுத் தன்மை யெனப்படும். அத்தன்மையினை விளக் குதற் பொருட்டு அன்ன, ஆங்க, போல, புரைய என்பன முதலாக அவற்றைச் சார்ந்துவரும் இடைச் சொற்கள் உவமவுருபெனப் படும். இங்ங்ணம் உவமையும் பொருளும் அவற்றிடையே